செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 22, 2022

செய்திச் சுருக்கம்

அரசாணை

தமிழ்நாட்டில் 2000 கி.மீ. நீளமுள்ள 873 ஊராட்சி சாலைகளை ரூ. 2,178 கோடியில் மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது என நெடுஞ்சாலைத் துறை செயலாளர் பிரதீப் தகவல். 

அறிவிப்பு

தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான ‘நீட்‘ பயிற்சி வகுப்புகள் வரும் 26ஆம் தேதி துவங்கு கிறது என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

பொறுப்பேற்பு

இந்திய தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

குற்ற வழக்கு

அரசு கேள்வி டிவி நிறுவனத்தின் மென்பொருளை செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

நீட்டிப்பு

சொத்து உரிமையாளர்கள் 2022-2023ஆம் நிதியாண்டிற்கான இரண்டாம் அரையாண்டு சொத்து வரியை தனிவட்டி இல்லாமல் செலுத்த கால அவகாசம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.


No comments:

Post a Comment