இன்று வீரமாமுனிவர் பிறந்த நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 8, 2022

இன்று வீரமாமுனிவர் பிறந்த நாள்

 மகத்தான தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் 1680ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார். இன்று அவரது 342ஆவது பிறந்த நாள் ஆகும். அவர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது இயற்பெயரை முதலில் தைரியநாதன் என்று மாற்றிக் கொண்டார். பிறகு அதுவும் சமஸ்கிருதம் என்று அறிந்து வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார்.

இவர் இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றை படைத்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் மற்றும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகியவற்றை பல்வேறு அய்ரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய அய்ந்து இலக்கணங்களை தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழ் மொழியில் முதன்முதலாகப் பேச்சுத்தமிழை விவரித்தார்.

இவர் தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். தமிழ்மொழி யின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணி களைச் செய்த வீரமாமுனிவர் 1747ஆம் ஆண்டு மறைந்தார்.

No comments:

Post a Comment