டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல்; அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்.
பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டால் சமூகநீதி கொள்கைக்கு மிகப்பெரிய ஆபத்து: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
ஏழைகளுக்கு புதிய இட ஒதுக்கீட்டை உருவாக்குவது பொருளாதார நீதியை முன்னேற்றும். ஆனால் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி. (மொத்த ஏழைகளில் சுமார் 81.5 சதவீதம் பேர்) உள்ள ஏழைகளை இட ஒதுக்கீட்டில் இருந்து ஒதுக்குவது ஏழைகளில் உள்ள ஏழைகளுக்கு சமத்துவத்தை யும் நீதியையும் மறுக்கும் என மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து.
பிராந்தியத் தேர்தல்களுக்காக பிரச்சாரம் செய்வதில் பிரதமர் அதிக நேரத்தை செலவிடுகிறார். ஆனால், தீவிரமான தேசியப் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு அனுபவமில்லாத துணை அதிகாரிகளை அனுமதிப்பதற் காக அவர் எடுத்துக் கொண்டார். இது இந்தியாவை (அவர் மூலம்) மீண்டும் விஸ்வ குருவாக மாற்றும் அவரது கனவை குறைக்கிறது என்கிறார் கட்டுரையாளர் தல்வீன் சிங்
டைம்ஸ் ஆப் இந்தியா:
தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் உயர்ஜாதி அரிய வகை ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்ததை யடுத்து, அகில இந்திய காங்கிரஸ், இப்பிரச்சினை குறித்த தனது நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்யும் என ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment