6.11.2022 அன்று காலை 11.30 மணிக்குத் துறையூர் பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனு ஸ்மிருதி நூல் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மனு ஸ்மிருதி புத்தகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் மீசை குமாரிடம் திருச்சி மண்டல திராவிடர் கழக செயலாளர் மணிவண்ணன் வழங்கி, தொடங்கி வைத்தார். உடன் துறையூர் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் இர.வரதராஜன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்குரைஞர்
ரஞ்சித், கிழக்கு ஒன்றிய செயலாளர் மொழி சிவக்குமார், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment