சென்னை,நவ.3- தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந் துள்ள நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளது. நேற்று (2.11.2022)காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 15 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக சென்னை பெரம்பூர், ஆவடியில் தலா 17 செ.மீ. மழை பதிவாகி யுள்ளது என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மய்ய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நவ. 2ஆம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, 15 இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை பெரம்பூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஆகிய இடங்களில் தலா 17 செ.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுக்குப்பம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தலா 16 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், கும்மிடிப்பூண்டியில் தலா 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment