10 சதவீத இடஒதுக்கீடு: மக்கள் நீதி மய்யம் எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

10 சதவீத இடஒதுக்கீடு: மக்கள் நீதி மய்யம் எதிர்ப்பு

சென்னை, நவ.9 உச்சநீதிமன்றத் தின் தீர்ப்பு, சமூக நீதிக்காகப் போராடி வருவோருக்கு மிகுந்த அதிர்ச்சியளித்துள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.

 மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதா வது;- "பொருளாதாரத்தில் பின் தங்கிய, முற்பட்ட வகுப்பினருக் கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தின் தீர்ப்பு, சமூக நீதிக்காகப் போராடி வருவோருக்கு மிகுந்த அதிர்ச்சியளித்துள்ளது. சமத் துவம், சமூக நீதிக்கான போராட் டங்கள் இன்னும் வலுவாக முன் னெடுக்கப்பட வேண்டுமென் பதை இந்த தீர்ப்பு உறுதி செய் துள்ளது. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறியப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை 2019-ல் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தது. அரசியல் சாசனத்தின் 103-ஆவது திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட இந்த சட் டம், அரசியல் சாசனத்துக்கே எதிரானது என்று பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், ஒன்றிய அரசு எதிர்ப்புகளைக் கண்டுகொள்ள வில்லை. இதனால், பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. வறுமை என்பது அனைவருக்கும் சம மானது. அப்படி இருக்கையில், குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட் டும் வறுமையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது நியாய மாகுமா? பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை குறிப்பிட்ட வகுப்பாக எப்படி வகைப்படுத்த முடியும்? இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் கிடையாது, பொருளாதாரத்தின் நிலையை அடிப்படையாகக் கொண்டதும் கிடையாது என் பதை ஒன்றிய அரசு ஏற்காதது ஏன்?

உச்சநீதிமன்ற தலைமை நீதி பதியும், மற்றொரு நீதிபதியும்கூட, "பிற்படுத்தப்பட்டவர்களைத் தவிர்ப்பது, அடிப்படைக் கட்ட மைப்பை மீறுவதாகும். ஜாதி, வர்க்க வேறுபாடின்றி எல்லா ஏழைகளும் சமமானவர்கள்தான்" என்று தெரிவித்துள்ளனர். எனி னும், மற்ற 3 நீதிபதிகள் மாறுபட்ட உத்தரவு பிறப்பித்துள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கி யவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை. அது மட்டுமல்ல, மாதம் ரூ.60 ஆயிரத் துக்கு மேல் வருவாய் ஈட்டு பவர்களை, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்று கூறு வது ஏற்புடையதா? பல நூற் றாண்டுகளாக கல்வி மறுக்கப் பட்டவர்கள், மற்றவர்கள்போல சமமாக வாழ முடியாதவர்கள், ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு கல்வி, வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று, பல ஆண்டுகளாகப் போராடிப் பெற் றதே இடஒதுக்கீட்டுக் கொள்கை. அதை நீர்த்துப் போகச் செய்யவே, இதுபோன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இன்னும் என்னவெல்லாம் திட்டம் உள்ளதோ?

பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடனுதவி போன்ற பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தலாமே தவிர, இட ஒதுக்கீடு வழங்குவது கேலிக் குரியது. இந்த விவகாரம் தொடர்பாக, 8.7.2019 அன்று தலைமைச் செயலகத்தில் நடை பெற்ற அனைத்துக் கட்சிக் கூட் டத்தில் கமலஹாசன்  இத்தகைய இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு மற் றும் இட ஒதுக்கீட்டின் உண்மை யான நோக்கத்திற்கு எதிரானது என்று மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாட்டை உறுதிபட வலி யுறுத்திப் பேசினார்

சமூக நீதியை, சமத்துவத்தை நிலைநாட்ட, இன்னும் வேகமான போராட்டங்களை நடத்த வேண்டும் என்பதையே இது போன்ற தீர்ப்புகள் உறுதிப் படுத்துகின்றன. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, எல்லோரும் இணைந்து குரல்கொடுக்க முன்வரவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத் துகிறது. இதற்கான முன்னெடுப் புகளில் அனைத்து கட்சியினருடனும் மக்கள் நீதி மய்யம் தோளோடு தோள் நிற்கும்!" இவ்வாறு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment