மதச்சார்பின்மை புறக்கணிப்பு - மொழித்திணிப்பு தீவிரப்படுத்தும் பா.ஜ.க. அரசு மருத்துவர்களின் மருந்து சீட்டில் சிறீஹரியாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 18, 2022

மதச்சார்பின்மை புறக்கணிப்பு - மொழித்திணிப்பு தீவிரப்படுத்தும் பா.ஜ.க. அரசு மருத்துவர்களின் மருந்து சீட்டில் சிறீஹரியாம்!

போபால்,அக்.18- நாடுமுழுவதும் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக கண்டனங்கள் வெளியாகி வரும் நிலையில், ஒன்றிய பாஜக அரசு மருத்துவத் துறையில் இந்தி மொழியைத் திணிப்பதை வேகப்படுத்தி வருகிறது.

நாட்டிலேயே முதல் முறையாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவ படிப்பு இந்தி மொழியில் தொடங்கப்பட்டுள்ளது. இதை யடுத்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 16.10.2022 அன்று எம்பிபிஎஸ் படிப்புக்கான புத்தகங்களை இந்தி மொழியில் வெளியிட்டார். 

அப்போது, நோயாளிகளுக்கு வழங்கும் பரிந் துரை சீட்டில் மருந்துகளின் பெயரை இந்தியில் எழுதலாம் என அரசு மருத்துவமனை மருத் துவர்களை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார். இதுபோல, பரிந்துரை சீட்டின் தொடக்கத்தில் ஸிஜ் (சாப்பிட வேண்டிய மருந்து) என எழுதுவதற்கு பதில் ‘சிறீஹரி’ என எழுத லாம் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியிருந்தார். 

இந்நிலையில், ம.பி.யின் சத்னா நகரைச் சேர்ந்த மருத்துவர் சர்வேஷ் சிங் முதல மைச்சரின் அறிவுரைப்படி,  தனது நோயாளிக்கு வழங்கிய பரிந்துரை சீட்டில் ‘ஸ்ரீ ஹரி’ என எழுதிவிட்டு, நோயாளியின் பிரச்சினைகள், அதைத் தொடர்ந்து சாப்பிட வேண்டிய மருந் துகளின் பெயரை இந்தி மொழியில் எழுதி உள்ளார். 

இந்த மருந்து சீட்டின் ஒளிப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது அம் மாநிலம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.


No comments:

Post a Comment