திருப்பூர்,அக். 9- திருப்பூர் திருமுரு கன்பூண்டி பகுதியில் உள்ள சிறி விவேகானந்தா சேவாலயத்தில் 15 சிறுவர்கள் தங்கி அருகில் உள்ள அம்மாபாளையம் அரசு பள்ளியில் கல்வி பயின்று வந்ததனர்.
இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி இரவு ரசம் சோறு சாப்பிட்டு உடல் உபாதைக்குள்ளாகியுள்ள னர். 6ஆம் தேதி காலை ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது இரண்டு மாணவர்கள் உயிரிழந் தும், மீதமுள்ள 12 மாணவர்கள் மற்றும் ஒரு காவலர் மயக்கம் அடைந்த நிலையிலும் இருந்துள்ள னர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு மேலும் ஒரு மாணவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மீதமுள்ள 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தமிழ்நாடு அரசால் சம்பவம் குறித்து விசாரணை மேற் கொள்ள அமைக்கப்பட்ட மூத்த அய்ஏஎஸ் அதிகாரியான மணி வாசகம் தலைமையிலான குழு வினர் மற்றும் சமூக நலத்துறை இயக்குநர் வளர்மதி தலைமையிலான குழுவினர் நேரில் காப்ப கத்தில் ஆய்வு மேற்கொண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களிடம் விசா ரணை மேற்கொண்டனர். அப் போது சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் காப்பகத்தில் சிறுவர் கள் தங்குவதற்கான பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை எனவும் காப்பக நிர்வாகத்தின் அஜாக் கிரதை மற்றும் மெத்தனப்போக்கு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதால் காப்பகம் மூடப்படுவ தாக அறிவித்தார்
இதனையடுத்து நேற்று (8.10.2022) காலை திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் வினீத், மூத்த அய்ஏஎஸ் அதி காரி மணிவாசகம் உள்ளிட்டார் காப்பகத்தில் நேரில் ஆய்வு மேற் கொண்டு வருவாய் துறையினருக்கு காப்பகத்தை மூட உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து வட் டாட்சியர் ராஜேஷ் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் காப் பகத்திற்கு பூட்டு போட்டு மூடப் பட்டது. மேலும் உயிரிழந்த மூன்று மாணவர்களின் உடல்கள் பெற் றோர்களிடம் ஒப்படைக் கப்பட்ட தையடுத்து திருப்பூர் மின்மயானத் தில் எரியூட்டப்பட்டது. திருமுரு கன்பூண்டியில் பூட்டு போட்டு மூடப்பட்ட காப்பகத்திற்கு துப் பாக்கி ஏந்திய காவல்துறை பாது காப்பு போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment