சென்னை, அக்.18 சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (17.10.2022) தொடங்கியதும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற அலுவல் ஆய்வுகுழு கூட்டத்தில் அக்டோபர் 19ஆம் தேதி வரை 2 நாட்கள் மட்டுமே சட்டப்பேரவை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்து உள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து அவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அய்.பெரியசாமி, க.பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர். அதிமுக சார்பில் கொறடா எஸ்.பி.வேலுமணி அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் மட்டும் பங்கேற்றார். மற்ற கட்சி உறுப் பினர்களும் பங்கேற்றனர். இந்த ஆய்வுக் குழு கூட்டத்தில், அக்டோபர் 19ஆம் தேதி வரை சட்டப்பேரவையின் மழைக் கால கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட் டுள்ளது. அதன்படி, 19ஆம் தேதி வரை 2 நாட்களுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டுள்ளது.
இதை அவைத்தலைவர் அவையில் அறிவித்தார். தொடர்ந்து, இரு நாள் நடைபெற உள்ள கூட்டத் தொடரில், 2022-2023-ஆம் ஆண்டுக்கான கூடுதல் வரவு, செலவுத் திட்டம் தாக்கல் , இந்தித் திணிப்பு போராட்டம் தொடர்பாக விவாதிக்கப்படும் எனவும் அவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். மேலும் மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment