பெரம்பலூர், அக்.24 தமிழ்நாடு அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மய்யம் அமைக்க நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 18 வயது முதல் 45 வயது வரையுள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு இதுவரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மய்யம் அமைக்க நிதி உதவி பெறாதவராக இருக்க வேண்டும். எனவே, தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத் திறனாளி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி மாற்று சான்றிதழ் மற்றும் கடவுச்சீட்டு அளவு ஒளிப்படம்-2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அடுத்த மாதம் (நவம்பர்) 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலகத்தை 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிறீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
Monday, October 24, 2022
நிதிஉதவி பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment