சென்னை, அக்.14 தென்னிந்தியாவில் தொழில் முனைவு திறனின் மிகப் பெரிய மாநாட்டு நிகழ்வை நடத்தி வரும் "டைகான் சென்னை" அமைப்பு தமிழ்நாட் டின் சிறந்த தொழில்வோர்களை தேர்வு செய்து 'டைகான் சென்னை 2022' விருதை வழங்கியுள்ளது.
பல்வேறு தொழில் பிரிவுகளில் தொலைநோக்குப் பார்வையுடன் தலைமையேற்று நடத்தி வரும் எம்.எம். முருகப்பன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனை விருது, ஆயத்த ஆடைகள் தயாரிப்பு தொழில் துறையில் சிறந்த விளங்கும் கவுதம் சரயோகிக்கு சிறந்த தொழில் முனைவோ ருக்கான விருது, சிறந்த ஸ்டார் அப் விருது மதுமிதாவுக்கும், அதிக மீள்திறன் கொண்ட ஸ்டார்ட் அப் விருது அரி கணபதிக்கும், சிறந்த பெண் தொழில் முனைவோர் விருது பத்மினி ஜானகிக்கும், டீப் டெக் ஏதுவாக்குனர் விருது டாக்டர் சத்யா சக்ரவர்த்திக்கும் வழங்கப்பட்டது.
தொழில் துறைக்கும் மற்றும் பொது சமூகத்திற்கும் இவர்கள் வழங்கியிருக்கும் பங்களிப்பை இவ்விருதுகள் மூலம் சிறப்பிப்பதில் நான் பெருமை கொள் கிறேன் என டை சென்னை அமைப்பின் தலைவர் சி.கே. ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment