Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பண்டிகைகளின் பெயரால் பணமும், உழைப்பும் பாழ்!
October 19, 2022 • Viduthalai

"பண்டிகை என்ற பெயரால் மக்கள் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணமும், காலமும், உழைப்பும் பாழாவது பற்றி யாருக்கும் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

மாதந் தவறினாலும் பண்டிகைகள் தவறுவது கிடையாது. இந்த ஒரு மாதத்தை எடுத்துக் கொண்டால் கேட்கவே வேண்டாம். விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி என்று இத்தியாதி இத்தியாதி பண்டிகைகளின் வரிசை!

விளம்பரங்கள் மூலம் வியாபாரிகள் மக்களை ஈர்த்து கறந்து விடுவதற்கு அளவேயில்லை. 

ஆயுத பூஜை   முடிவடைந்தது

1. பூ மற்றும் மாலை -  4 கோடி மக்கள், வாகனங் களுக்கு, படங்களுக்கு  - 8 கோடி மாலை - ஒரு மாலை 50  ரூபாய் என்று வைத்தால் கூட 400 கோடி ரூபாய்.

2. வாழைக் கன்று - 5 கோடி கன்றுகள் - தொழிற்சாலை, லாரி, பஸ் ஒன்றுக்கு ரூபாய் 50 என்று வைத்தால் கூட ரூ.250 கோடி.

3. இனிப்பு ஒரு ஆளுக்கு கால் கிலோ என்று வைத்தால் 2 கோடி பேர் - ரூ.400 கோடி.

4. வீட்டுக்குத் தேவையான பூஜை சாமான்கள் ஒரு குடும்பத்துக்கு ரூ.100 என்று வைத்துக் கொண்டால் கூட ரூ.200 கோடி.

5. இது தவிர தொழிற்சாலைகள் ஒரு கோடி மக்களுக்கு பரிசுப் பொருட்கள் ரூ.500 என்று வைத்துக் கொண்டால் 500 கோடி ரூபாய்.

கூட்டினால் ரூ.2500 இலிருந்து ரூ.3000 கோடி. 

ஒரு நாளில் அதுவும் ஏழை எளிய மக்கள் பயன் அடையும் வகையில்   பண்டிகைகள் உள்ளன.

இந்தப் பண்டிகைக்கு வரும் முக்கால்வாசி பொருட்கள் விவசாயம் சார்ந்தவை. சிறு வியாபாரிகளிடம் வாங்கலாம்.

இங்கே பண்டிகைகளும் திருவிழாக்களும் தான் இந்தியாவின் பொருளாதாரத்தை தூக்கிப் பிடிக்கின்றன என்பதை எல்லாரும் உணர வேண்டும்

இதை எல்லாம் அழித்தால் பின் நம் பொருளாதாரம் அழிந்து விடும். பிறகு ஆப்ரிக்கா நாடுகள் போல நாமும் நமது பாரம்பரியத்தை இழந்து மேற்கத்திய  நாட்டினரிடம் தான்  கை ஏந்தி நிற்க வேண்டும்.

கடவுளை கும்பிடும் போது  பல பேர் வாழ்வார்கள். முக்கியமாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நலமுடன் வாழ்வார்கள்.” 

-இவ்வாறான பதிவுகள் சமூக ஊடகங்களில் பெரும் அளவில் பகிரப்படுகின்றன.

மேற்கண்ட சமூக வலைத்தளப்பதிவுமூலம் வியாபாரத்துக் குத்தான் பக்தி என்பது வெளிப்படையாகிவிட்டது. 

மேலும் அந்த வியாபாரத்தின்மூலம் பக்தி, பண்டிகையின் பெயரால் அப்பாவி மக்கள் பொருளிழப்புக்கு ஆளாகி விடுகிறார்கள் என்கிற உண்மையை யார் எடுத்துக்கூறுவது?

அந்த வியாபாரத்தின்மூலம் நுகர்வோர் பெற்ற பயன் என்ன என்ற கேள்வி எழும்போது, பதில் சூன்யமாகிவிடுகிறது.

மதம், கடவுள், பக்தி, பழக்க வழக்கம் என்பதன் பெயரால் அறிவை இழப்பது ஒன்றே இதன்மூலம் நிரூபணமாகியுள்ளது. பண்டிகைகளின் பெயரால் மக்களின் பொருள் சுரண்டப் படுவது மட்டும் அல்லாமல், அறிவும் அல்லவா இழக்கப் படுகிறது. பகுத்தறிவின்றி மக்கள் பாழ்படுத்தப்படுகிறார்கள் என்பதுதானே உண்மையிலும் உண்மை.

ஓர் ஆண்டில் பாதி நாட்களை விரயமாக்கும் ஒருநாடு எப்படி முன்னேறும்?

பணம் கையில் இல்லையெனில் கடன் வாங்கி செலவழிக்கும் கொடுமையை என்னவென்று சொல்லுவது!

மக்கள் இப்படி தறி கெட்டுப் போவதற்கு ஊடகங்களும் முக்கிய காரணிகளாகும்.

வாரா வாரம் ஆன்மிக இதழ் என்றும், சோதிட வார இதழ் என்றும், பண்டிகைகள் வந்தால் அவை குறித்த சிறப்பிதழ்களும் வெளியிட்டு, மக்களின் சிந்தனையை மழுங்கடிப்பது ஆரோக்கியமானது தானா?

'நாய் விற்ற காசு குரைக்காது' என்ற பழமொழிதான் நினைவிற்கு வந்து தொலைகிறது. 

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
சமூகநீதி கோரி வரும் 11 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
February 07, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn