அய்.அய்.டி ஆராய்ச்சி பூங்காவில் மூத்த குடிமக்களுக்கு உதவ தொழில்நுட்ப மேம்பாட்டு மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

அய்.அய்.டி ஆராய்ச்சி பூங்காவில் மூத்த குடிமக்களுக்கு உதவ தொழில்நுட்ப மேம்பாட்டு மாநாடு

சென்னை, அக். 15- சென்னை தரமணியில் உள்ள அய். அய்.டி ஆராய்ச்சி பூங்கா வில் எம்பவர்  2022 என்ற தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டு துவக்க நிகழ்ச்சியில்  உலக சுகாதார நிறுவனத்தின் உதவி தொழில்நுட்பம்  மற்றும் மருத்துவ சாத னங்களுக்கான பிரிவின் தலைவர் சப்பல் கஸ்லீபிஸ், சைபர் மீடியா குழு மத்தின் தலைவர் பிரதீப் குப்தா, பேராசிரியர் அசோக் ஜூன் ஜூன் வாலா ஆகி யோர் உரையாற்றினர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்க ளுக்கான தொழில்நுட் பத்தை ஊக்குவித்து மேம் படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது. 

இந்த தொழில்நுட்ப ஆராய்ச்சியில ஈடுபட்டுள்ள மற்றும் முதல் முறையாக தொழில் முனைவேராக உள்ளவர் கள் தங்களது கருத்துக் களை பகிர்ந்து கொள்வ தற்கான மாநாடாகவும் இது அமைந்திருந்தது.

No comments:

Post a Comment