குடியாத்தம் : மூடநம்பிக்கை முறியடிப்பு நிகழ்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

குடியாத்தம் : மூடநம்பிக்கை முறியடிப்பு நிகழ்வு

குடியாத்தம், அக்.28 கிரகணத்தின்போது சாப்பிடக்கூடாது, கர்ப்பிணிப் பெண் கள் வெளியில் வரகூடாது என்ற மூட நம்பிக்கையை முறியடிக்கும் வண் ணம் 25.10.2022 அன்று வேலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக குடியாத்தம்  பெரியார் அரங்கத்தில் மாலை 5.30 மணிக்கு மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட தலைவர் இர.அன்பரசன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் வி.சடகோபன், மாநில மகளிரணி அமைப்பாளர் ந.தேன்மொழி, பொதுக்குழு உறுப்பி னர் வி.இ.சிவக்குமார், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் சி.லதா, நகர அமைப்பாளர் வி.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ச.ரேவதி, மாவட்ட துணை செய லாளர் துரைசெல்வம், நகர (சி.பி.அய்) ஒன்றிய செயலாளர் ஜி.ஆனந்தன், வேலூர் மாவட்ட செயலாளர், (தி.வி.க), வேலூர் நாடாளுமன்ற தொகுதி செய லாளர் (வி.சி.க) இரா.சிவாசி.செல்ல பாண்டியன் மற்றும் கர்ப்பிணிப் பெண் களும், அனைத்துக் கட்சி தோழர்களும் கலந்து கொண்டு மூட நம்பிக்கை ஒழிப்பு உரை நிகழ்த்தினர்.

சரியாக மாலை 5.30 மணிக்கு தோழர்கள் அனைவரும் சிற்றுண்டி சாப்பிட்டனர். கழக நகர தலைவர் சி.சாந்தகுமார் நன்றியுரையாற்றினார்.

No comments:

Post a Comment