காணொலியில் கருத்தரங்கம் கழகத் தலைவர் கருத்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 16, 2022

காணொலியில் கருத்தரங்கம் கழகத் தலைவர் கருத்துரை

"ஆர்.எஸ்.எஸ். தலைமையின் உருமாற்ற வித்தை" என்னும் தலைப்பில்  திராவிடர் கழகத்தின் சார்பாக காணொலி கருத்தரங்கம் நேற்று மாலை 6.30 முதல் 8.30 வரை சிறப்பாக நடைபெற்றது.

கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் 

கி. வீரமணி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் 

கலி. பூங்குன்றன், மூத்த இதழாளர் (மேனாள் ஃபரண்ட்லைன் ஆசிரியர்) விஜயசங்கர், திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி ஆகியோர் கருத்துரை வழங்கினர். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் தொழில் நுட்ப உதவியை வழங்கினார்.

நாக்பூரில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வர்ணாசிரமம், ஜாதி என்பது எல்லாம் காலம் கடந்தவை அவற்றைக் கைவிட வேண்டும் என்று பேசியுள்ளார். இந்த நிலையில் தான் "ஆர்.எஸ்.எஸ். தலை மையின் உருமாற்ற வித்தை" என்ற தலைப்பில் நேற்று (15.10.2022) காணொலியில் கருத்தரங்கம் நடைபெற்றது. 

2024இல் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர்களின் உண்மையான கொள்கைகளை மறைத்து வித்தை காட்டும் வேடத்தை நேற்றைய காணொலி கருத் தரங்கம் தோலுரித்துக் காட்டியது.

ஏராளமானவர்கள் இந்தக் காணொலியில் பார்வையாள ராகக் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment