குமரி மாவட்டம் சார்பாக கிராமப்புற விழிப்புணர்வு பிரச்சாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

குமரி மாவட்டம் சார்பாக கிராமப்புற விழிப்புணர்வு பிரச்சாரம்

கன்னியாகுமரி மாவட்ட கழகம்  சார்பாக கிராமப்புற  பகுதிகளில்  பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர். நிர்வாகிகள்: இராமபுரம் ஊராட்சி, இலட்சுமிபுரம் பகுதிகளில் நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு  குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.  மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார்.  மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், கன்னியாகுமரி கிளை அமைப்பாளர் க.யுவான்ஸ், கழக மாவட்ட மகளிரணி தலைவர் சு.இந்திரா,  தோழர்கள் முத்து வைரவன், ம.தமிழ்மதி  காட்வின் உள்பட பலரும் கலந்து கொண்டனர் . தந்தை பெரியாருடைய கருத்துகள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய கருத்துகள் அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்கள்  ஆர்வமுடன் வாங்கி படித்தனர்.


No comments:

Post a Comment