சேலம், அக். 15- பொதுக்குழு உறுப்பினர் பழனி. புள்ளையண் ணன், சேலம் மண்டல தலைவர் கவிஞர் சி.சுப்ரமணியம் ஆகி யோர் முன்னிலையில் தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட தலைவர் அ.ச. இளவழகன் மற்றும் மேட்டூர் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் கழக தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மாவட்ட காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் கி.ஜவகர் தோழர்கள் முழக்கமிட கழக கொடியேற்றிவைத்தார்.
மாவட்ட செயலாளர் பா. வைரம் சமூகநீதி நாள் உறுதி மொழி கூற கழக தோழர்களும், உணர்வாளர்களும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
சேலம் மாநகராட்சி மேனாள் எதிர்க்கட்சி தலைவருமான தோழியர் புவனேசுவரி அவரது இணையர் முரளி, மகன்கள் அபிநேசு மற்றும் அரீசு அகி யோர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி பெரியார் பிறந்தநாள் மகிழ்வை பகிர்ந்து கொண்டனர்.
மாவட்ட இளைஞரணி தலைவர் அ.இ. தமிழர் தலைவர் பங்கேற்றவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
சூரமங்கலம் உழவர் சந்தை எதிரில் வைக்கப்பட்ட பெரியார் படத்திற்கு மாநகர துணை தலைவர் இரா. இராஜீ மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
ஜாகீர் ரெட்டிபட்டி பகுதி யில் மாவட்ட துணைதலைவர் பழ. பரமசிவம் பெரியார் படத் திற்கு மாலை அணிவித்து அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி பிறந்தநாளை கொண்டாடினார்.
சீலநாயக்கன்பட்டியில் வைக் கப்பட்ட பெரியார் படத்திற்கு மாநகர தலைவர் அரங்க. இள வரசன் மாலை அணிவித்து அப் பகுதியில் இனிப்புகள் வழங் கினார்.
ஆரா கிளினிக் முன்பாக அலங்கரிக்கப்ட்டு வைத்த பெரியார் படத்திற்கு தி.மு.க. பிரதிநிதி ச.சுப்ரமணி (தாதகா பட்டி தாகூர் தெருவில்) மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார்.
தாதகாபட்டி பிரதான சாலை வீரமணி டிரேடர்ஸ் முன் பாக வைக்கப்பட்ட பெரியார் படத்திற்கு தொழிலதிபர் இரா.வீரமணி தனது பணியாளர்களு டன் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு கோழி பிரியாணி பரி மாறி மகிழ்ச்சியை வெளிப்படுத் தினார்.
தாதகாபட்டி மரகதம் மாரியப்பன் நினைவு பெரியார் மருத்துவமனை முன்பாக வைக் கப்படிருந்த பெரியார் படத்திற்கு மருத்துவர் மாலதி சகஊழியர் களுடன் மாலை அணிவித்து பிறந்தநாளை கொண்டாடினார்.
குகை பிரபாத் எதிரே வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மேனாள் மண்டல செயலாளர் சி.பூபதி மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
கருங்கல்பட்டி காய்கறி மார்கெட் முன்பு வைக்கப்பட்ட பெரியார் படத்திற்கு மாநகர செயலாளர் இராவணபூபதி மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
கருங்கல்பட்டி கிழக்கு தெரு ஜே.வி. ஸ்டீல்ஸ் அலுவலகம் முன் மாவட்ட காப்பாளர்
கி. ஜவகர் இணையர் விசாலாட்சி ஆகியோர் பெரியார் படத்திற்கு மாலையணிவித்து ஒலிமுழக்கம் எழுப்பினர்.
பொன்னமாப்பேட்டை லெசலா ஆடையகம் முன்வைக் கப்பட்ட பெரியார் படத்திற்கு ஜெ.கருணாகரன், லெசலா ஊழி யர்கள் மற்றும் பொன்னமாப் பேட்டை டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஸ்டேண்ட் நிர்வாகி கள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.
அம்மாப்பேட்டை பெரியார் மன்றத்தின் வாயிலில் வைக்கப் பட்ட பெரியார் படத்திற்கு பொறியாளர் பாஸ்கர் மற்றும் கட்டிட பணியாளர்கள் ஒன்று கூடி மாலை அணிவித்து மரி யாதை செய்தனர்.
அயோத்தியாபட்டணம் இராமர் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பெரியார் படம் வைக்கப்பட்டு அமைப்பாளர் மாதேசுவரன் மாலை அணி வித்து பொதுமக்களுக்கு சர்க் கரை பொங்கல் வழங்கி கொண் டாடினார்.
நிகழ்வில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் சுந்தரவ தனம் பங்கேற்று சிறப்புசெய்தார்.
வித்யா நகர் பகுதியில் வைக் கப்பட்ட பெரியார் படத்திற்கு மாநகர துணை தலைவர் இராஜீ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அம்மாப்பேட்டை பிரதான சாலை குயில் பண்ணை முன்பாக வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாவட்ட இளை ஞரணி தலைவர் அ.இ. தமிழர் தலைவர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.
No comments:
Post a Comment