சுற்றுலாப் பயணிகள் வருகை மாமல்லபுரம் முதலிடம் தாஜ்மகால் இரண்டாம் இடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

சுற்றுலாப் பயணிகள் வருகை மாமல்லபுரம் முதலிடம் தாஜ்மகால் இரண்டாம் இடம்

சென்னை, அக். 5- யுனெஸ் கோவின் உலகப் பாரம் பரியச் சின்னமாக வகைப் படுத்தப்பட்ட தமிழ்நாட் டைச் சேர்ந்த மாமல்ல புரம் சுற்றுலாத் தளத்தை காண வந்த வெளிநாட்டுப் பார்வையாளர்களின் எண்ணிக்கையானது, ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை காண வந்த வெளிநாட்டுப் பார்வை யாளர்களின் எண்ணிக் கையை விட அதிகமானது என்று சுற்றுலாத் துறை அமைச்சர் வெளியிட்ட இந்திய சுற்றுலாப் புள்ளி விவரம் 2022 தெரிவித்து உள்ளது.

இந்திய சுற்றுலாத் துறை அமைச்சகம்  வெளி யிட்டுள்ள அறிக்கையின் படி, 2021-22 ஆம் ஆண் டில் சென்னையிலிருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ள மாமல்ல புரத்திற்கு 1,44,984 வெளி நாட்டுப் பார்வையாளர் கள் வந்துள்ளனர். ஆக்ரா வில் உள்ள தாஜ்மஹாலை காண 38,922 வெளிநாட் டுப் பார்வையாளர் வந் துள்ளனர்.

மேலும் ஆக்ரா கோட் டையை காண 13,598 வெளிநாட்டுப் பார்வை யாளர்களும் மற்றும் டில்லியில் உள்ள குதுப் மினாரை காண 8,456 வெளிநாட்டுப் பார்வை யாளர்களும் மற்றும் டில்லி செங்கோட்டையை காண 5,579 பார்வையா ளர்களும் வந்துள்ளனர்.

கடந்த வருடம் உள் நாட்டு சுற்றுலாப் பயணி களை அதிகம் பெற்ற முதல் அய்ந்து மாநிலங் கள் தமிழ்நாடு (115.33 மில்லியன்), உத்தரப் பிர தேசம் (109.70 மில்லியன்), ஆந்திரப் பிரதேசம் (93.27 மில்லியன்), கருநாடகா (81.33 மில்லியன்) மற்றும் மகாராட்டிரா (43.56 மில்லியன்)

ஒன்றிய அரசின் பட் டியலில் உள்ள முதல் 10 நினைவுச் சின்னங்களில் ஆறு சின்னங்களில் தமிழ் நாட்டில் தான் உள்ளன. அவை செங்கல்பட்டு மாவட்டத்தில் கடலோ ரக் கிராமத்தில் சாளுவன் குப்பத்தில் உள்ள புலித் தலை, பாறைக் கோயில். செஞ்சி மாவட்டத்திற்கு அருகிலுள்ள செஞ்சிக் கோட்டை. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அருகி லுள்ள வட்டக் கோட்டை கோட்டை. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திரு மயம் கோட்டை மற்றும் சித்தன்னவாசல். கடந்த வருடம் இந்த அய்ந்து மாநிலங்களின், மொத்த உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக் கையில் 65.41 சதவிகிதம்’’ என அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment