உங்களுக்கோர் நீதி! நாட்டுக்கோர் நீதியா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

உங்களுக்கோர் நீதி! நாட்டுக்கோர் நீதியா?

பண மதிப்பிழப்பின் போது வரிசையில் காத்திருந்த மக்கள் அரசின் மீது கடும் கோபத்தில் இருந்தனர், குழந்தைக்கு பால் கொடுக்கமுடியாமல் வரிசையில் நிற்கிறேன் என்றும் சிலர் சிறுநீர் பையை கையில் பிடித்தவாறு பணத்தை மாற்ற வங்கியில் வரிசையில் காத்திருந்தனர். இது குறித்து பலர் மோடி மற்றும் ஒன்றிய அரசையும் பாஜகவையும் கடுமையாக சாடினர். 

 அப்போது மோடிக்கு முட்டுகொடுக்க பல பிரபலங்கள் வரிசைகட்டி வந்தனர்.   அதில் ஒருவர் பிரபல நடிகர் மனோஜ் ஜோஷி.  நமது நாட்டைக்காப்பாற்ற ராணுவ வீரர்கள் வெளியிலும் கடும் குளிரிலும் கொட்டும் மழையிலும் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கின்றனர். அப்படி இருக்க நமது நாட்டு நலனுக்காக சில மணி நேரங்கள் கத்திருக்கமுடியாதா என்று கருத்து தெரிவித்திருந்தார். இவரது இந்தக்கருத்து இன்றும் சமூக வலை தளங்களில் கேலிப்பொருளாக உள்ளது. 

உணவகத்தில் உணவு சுவையில் லாமல் இருந்தால் கூட உடனே எல்லையில் ராணுவ வீரர்கள் என்று கூறுவது போல் கிண்டலடிப்பார்கள்.   இந்த நிலையில் அந்த நடிகர் டில்லியில் இருந்து மும்பை நோக்கி விமானத்தில் வந்துள்ளார். விமானத்தில் வந்து இறங்கிய பிறகு அவரது உடைமைகள் வருவதற்கு தாமதமாகிவிட்டது, 

 உடனே அவர்  நான் ஏர். இந்தியா விமானம் 634-இல் மும்பை விமான நிலையம் வந்தேன், சுமார் 40 நிமிடம் ஆகிவிட்டது என்னுடைய `லக்கேஜ்' இன்னும் வரவில்லை. இதனால் என்னுடைய 40 நிமிடம் வீணாகிவிட்டது நான் இதுவரை இப்படி நேரத்தை வீணடித்தில்லை. இதனால் இந்த நாள் முழுவதுமே வீணாகிவிட்டது,  இதற்காக இழப்பீட்டை யார் கொடுப்பார்கள் என்று எழுதி இருந்தார். 

 சிறுநீர் பையோடு பணமதிப்பிழப்பில் வங்கி வரிசையில் காத்திருந்தவர்களை கிண்டல் அடித்த இவர் தற்போது குளிரூட்டப்பட்ட அறையில் அனைத்து வசதிகளும் கொண்ட விமான நிலையத்தில் 40 நிமிடங்கள் கூட காத்திருக்க முடியாமல் புலம்பியுள்ளது பாஜக ஆதரவாளர்களின் வேடத்தை கலைத்துள்ளது. அவர் கூறியது மீண்டும் பரபரப்பிற்குள்ளாகி இருக்கிறது. 


No comments:

Post a Comment