'கடவுள்' சக்தி இவ்வளவுதான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 4, 2022

'கடவுள்' சக்தி இவ்வளவுதான்!

துர்க்கா பூசையில் நரபலி! மந்திரவாதி சொல்லைக் கேட்டு சிறுவனை பலியிட்ட தொழிலாளிகள்

புதுடில்லி, அக்.4 செல்வச் செழிப்பு வேண்டுமென கட்டட தொழிலாளிகள் 6 வயது சிறுவனை கழுத்தறுத்து நரபலி கொடுத்துள்ளனர். 

புதுடில்லியின் லோடி காலனி பகுதியில் சிறு குடி சைகள் அமைத்து கட்டட தொழிலாளிகள் வசித்து வருகின்றனர். அந்த குடிசைப் பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுவனின் பெற்றோ ரும் கட்டட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்த குடிசைப் பகுதியில்  சில பெண்கள் பூசை நடத்தியுள்ளனர். 

அந்த பூசை யில் சிறுவன் கலந்து கொண் டுள்ளான். பூசை நிகழ்ச்சி முடிந்ததும் பெண்கள் வெளியேறிய நிலையில் சிறுவன் மட்டும் வீடு திரும்பவில்லை. இத னால், அதிர்ச்சியடைந்த சிறு வனின் பெற்றோர் குடி சைப் பகுதியில் சென்று பார்த் துள்ளனர். அங்கு தங்கள் மகன் கழுத்து அறுக்கப்பட்டு, தலையில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். 

இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக் கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள், அதே குடியிருப்புப் பகுதியில் தங்கி கட்டட வேலை செய்துவந்த பீகாரை சேர்ந்த விஜய் குமார் மற்றும் அமீர் குமார் ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சிறுவனின் தலையில் அடித்தும், கழுத் தறுத்தும் நரபலி கொடுத்ததை ஒப்புக்கொண்டனர். 

சில நாட்களுக்கு முன்பு அப் பகுதிக்கு வந்த சாமியார் ஒருவர் உங்களுக்கு செல்வம் பெருகவேண்டுமென்றால் துர்க்காபூசையின் குறிப் பிட்ட நாளில் நரபலி கொடுத் தால் செல்வச் செழிப்பு உண் டாகும் என்று கூறியுள்ளார்.  அதனால்  அவர்கள் சிறு வனை நரபலி கொடுத்ததாக குற்றத்தை ஒப்புக்கொண் டனர். இதனை அடுத்து அனைவரையும் காவல்துறை கைது செய்தனர்.


No comments:

Post a Comment