மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 20, 2022

மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது?

தமிழ்நாட்டில் அனைத்து வீட்டு நுகர்வோருக் கும் 100 இலவச யூனிட்கள் உட்பட மானியம் பெற மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண் இணைப் பதை தமிழ்நாடு அரசு கட்டாயமாக்கியுள்ளது.

கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில், மானியத் திட்டங் களின் பலன்களைப் பெற விரும்பும் தகுதியுள்ள தனிநபர் ஆதார் எண் வைத்திருப்பதற்கான ஆதா ரத்தை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்திற்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

சொந்த வீடு வைத்திருப்பவர்கள் சிலர் அவற்றை வாடகைக்கு வீடு விடும் போது அவர்களிடம் கூடுதல் மின் கட்டணம் வசூலித்து மானிய விலையில் மட்டும் கட்டணம் செலுத்தி வருகின்றனர். சிலர் ஒரே வீட்டுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பு பெற்று குறைவான மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். இதனால் அரசுக்கு பல்வேறு வகையில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை ஒழுங்கு படுத்த மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தளத்தில் விரைவில் மின் நுகர்வு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான இணைப்பு வழக் கப்பட உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அந்த இணைப்பு வெளியாகும் எனத் தகவல்கள் தெரி விக்கின்றன. அந்த இணைப்பு கிடைத்தவுடன், நீங்கள் மின் நுகர்வு எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

பின்னர், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். அதனை பயன்படுத்தி மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்.ஆஃப் லைனில் இணைப்பது எப்படி? மின்சார வாரியத்தில் மின் கட்டணம் செலுத்தும் போது உங்களது மின் நுகர்வு எண் ணுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

காலக்கெடு என்ன?

தமிழ்நாடு அரசு மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவித்திருந்தாலும் அதற்காக இதுவரை எந்த காலக்கெடுவும் அறிவிக்கப்படவில்லை.ஆதார் எண் இல்லாத மற்றும் இன்னும் மானியம் பெற விரும்புபவர்கள் ஏதேனும் ஆதார் பதிவு மய்யம் அல்லது நிரந்தரப் பதிவு மய்யத்தில் ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு தனி நபருக்கு ஆதார் ஒதுக்கப்படும் வரை, அவர் தனது ஆதார் பதிவு அடையாளச் சீட்டையோ அல்லது ஆதார் பதிவுக்காக அவர் செய்த கோரிக்கையின் நகலையும், வங்கி கணக்குப் புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங் களுடன் சமர்ப்பித்து மானியத்தைப் பெறலாம்.

மாநில ஒருங்கிணைந்த நிதியில் இருந்து மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், ஆதார் சட்டத்தின் 7ஆவது பிரிவின் கீழ் மாநில அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment