பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை,அக்.22- இந்தியக் கடற் படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு நேற்று (21-10-2022) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், 10 மீனவர்கள் (தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், காரைக்காலைச் சேர்ந்த 3 பேர்) தங்களது விசைப்படகில் நடுக்கடலில் இன்று (21-10-2022) மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, அய்.என்.எஸ். பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்புப் பணியிலிருந்த இந்தியக் கடற்படையினர், இம்மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், வீரவேல் என்ற மீனவரின் மீது குண்டு பாய்ந்து, அவர் பலத்த காயங்களுடன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருவதாக முதல மைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் இந்தியக் கடற் படையினரின் செயல் மிகுந்த வருத் தத்திற்குரியது என்றும், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீன வர்கள் அவ்வப்போது தாக்கப்படுவ தால் ஏற்படும் துயரத்தை இந்தியப் பிரதமர் நன்கு அறிவார் என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந் தியக் கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது அடித்தட்டில் வாழும் மீனவர்களி டையே நம்பிக்கையின்மையையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத் துவதாக அமைகிறது என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விஷயத்தில் பிரதமர் உடனடியாகத் தலையிட்டு, இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை, இந்திய பாது காப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக் கையுடனும், நிதானத்துடனும் கையா ளுவதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண் டுள்ளார்.
No comments:
Post a Comment