ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 18, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள சுமார் 8 லட்சம் பணியிடங்களை அடுத்த ஆண்டுக்குள் நிரப்ப பொதுத் துறை நிறுவனங்களுக்கு மோடி அரசு அறிவுறுத்தல். (”எல்லாம் தேர்தல் ஜூரம்”)

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

எங்களை தனி மதப் பிரிவாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு ஸ்மார்த்த பார்ப்பனர்களின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் செய்த பல்வேறு வங்கி மோசடிகளில், தவறு செய்த ரிசர்வ் வங்கி அதிகாரிகளை விசாரித்து, வழக்குத் தொடரக் கோரிய பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்று, ஒன்றிய அரசுக்கும், சி.பி.அய்.க்கும் தாக்கீது.

குஜராத் வித்யாபீட பல்கலைக்கழகத்தின் வேந்த ராக, ஆர்.எஸ்.எஸ். பின்னணி உள்ள குஜராத் ஆளுநர் ஆச்சாரியா தேவ்ரத் நியமனம் செய்யப்படுவதை எதிர்த்து, பல்கலைக்கழக ஆட்சிக் குழுவில் உள்ள 24 அறங்காவலர் களில் எட்டு பேர் பதவி விலகினர்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment