ஓசூர், அக். 24- ஓசூர் காவேரி மருத்துவ மனையில் மூளைச் சாவு அடைந்த இளை ஞரின் இதயம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள்கொடையளிக்கப்பட்டு சென்னை பெங்களூரு மற்றும் கோவை ஆகிய இடங் களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவசர ஊர்திமூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (31). இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். பிரபாகரன் ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 20ஆம் தேதி பணியின்போது கீழே விழுந் ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஜோலார் பேட்டை ரயில்வே மருத்துவமனையில் முத லுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் காவேரி மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனு மதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்த அவர் சனிக்கிழமை (அக். 22) மூளைச்சாவு அடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்பு களைக் கொடையளிக்க அவரது குடும்பத் தினர் முன் வந்தனர்.
காவேரி மருத்துவமனை குழுவினர் மற்றும் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை மருத்துவ குழுவினர் இணைந்து மூளைச் சாவு அடைந்த பிரபாகரனின் உடலில் இருந்து இதயம், நுரையீரல், கண்கள், கிட்னி உள்ளிட்ட உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர். பின்னர் இந்த உறுப்புகள் சென்னை, கோவை, பெங்களூர் ஆகிய இடங்களிலுள்ள மருத்துவமனை களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத் துவமனைக்கு இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை முதலில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவையில் உள்ள கேஎம்
ஜிஎச்சுக்கு சிறுநீரகமும், பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு கண்களும் ஆம் புலன்ஸ் வாகனத்தில் அடுத்தடுத்து கொண்டு செல்லப்பட்டது. ரயில்வே ஊழியரின் உடலில் இருந்து கொடையாக வழங்கப்பட்ட உடல் உறுப்புகள் 7 பேருக்கு வழங்கப்பட உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment