நேரலையில் தொலைக்காட்சிகளும், இணைய ஊடகங்களும் ஒளிப்பரப்பிய ஒரு நிகழ்வைப் பற்றி அடுத்த சில மணிநேரங்களில் புரளியை கிளப்பிப் பரப்பிவிடும் ஓர் அயோக்கியக் கூட்டம் இருக்கிறதென்றால் அது இந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டம் தான்! (இரா மாயண, மகாபாரத புராண மகிமைக் கட்டுக் கதைகள் எல்லாம் எப்படி தோன்றியிருக்கும் என்பதற்கு இதுவே சான்று அல்லவா?
சூரிய கிரகண நேரத்தில் உணவு உண்ணக் கூடாது; கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக் கூடாது போன்ற மூடநம்பிக்கைகளை முறியடிக்க, ஒரு செயல்முறை நிகழ்ச்சியை பகுத்தறிவாளர் கழகம் ஒருங்கிணைத்தது. அதில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கவிஞர் கலி.பூங்குன்றன், வீ.அன்புராஜ், வழக்குரைஞர் அ.அருள்மொழி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எழிலரசி, சத்தியா ஆகிய இரு கர்ப்பிணிப் பெண்கள் பங்கேற்றனர்.
மேலும், கடந்த 2019-ஆம் ஆண்டு கர்ப்பிணிப் பெண்ணாக இதே போன்ற சூரிய கிரகண நிகழ்வில் பங்கேற்ற சீர்த்தி-பகலவன் இணையர், தங்கள் மகன் மகிழனுடன் பங்கேற்றனர்.
இது குறித்த செய்தி சன் செய்திகளின் சார்பில் news card-ஆகப் போடப்பட்டுள்ளது. அதை எடிட் செய்து, கேடுகெட்ட சங்கிக் கூட்டம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மரணம் என்பதாகவும், நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் போலிச் செய்தியைப் பரப்பத் தொடங்கியிருக்கிறது.
ஒரு மூடநம்பிக்கை முறியடிக்கப்படுவதை ஏன் இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால், அதன் மீதுதான் இவர்களின் கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. 'அறிவியல்' என்னும் புல்டோசர் கொண்டு அந்த மூடநம்பிக்கையின் அடித்தளங்கள் தகர்க்கப்படும்போது அவர்கள் பதறி வெளிவரத் தான் செய்வார்கள். இன்னும் ஆயிரம் பொய்களைப் பரப்பினாலும், உண்மை தான் நிலைத்து நிற்கும்.
மூடநம்பிக்கைகளை முறியடிக்க முன்வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றதோடு, ஊடகங்களிட மும் பேசிய அவ்விரு பெண்களும் எவ்வளவு தெளிவாகத் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர் என்பதை பெட்டிச் செய்தியில் காண்க.
"தேவையில்லாத மூடநம்பிக்கைகளைச் சொல்லி, கர்ப்பிணிப் பெண்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்குகிறார்கள்" என்று அறிவுப்பூர்வமாக வைத்த குற்றச்சாட்டு எத்தனைஉண்மையானது என்பதையும், எத்தகைய மோசமான உளவியல் தாக்குதலை நடத்திடக் கூடியவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ். அயோக்கியர்கள் என்பதையும் இந்த நிகழ்ச்சியே சொல்லும்.
குறிப்பு: கர்ப்பிணிப் பெண்கள் நலமாக இருக்கின்றனர். இந்தப் புரளிச் செய்தியை கேட்டு அவர்கள் சிரித்தனர்.
No comments:
Post a Comment