தாளநத்தம், அக்.23- தருமபுரி மாவட்டம் தாளநத்தம் கிராமத்தில் திராவிடர் கழகம், விடுதலை வாசகர் வட்டம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் -அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் 16.10.2022 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் கூட்டுறவு மைதானத்தில் நடைபெற்றது.
திமுக கிளை கழக செயலாளரும் ஒன்றிய பகுத் தறிவாளர் கழகச் செயலாளருமான சொ.பாண் டியன் தலைமை ஏற்று பேசினார். விடுதலை வாசகர் வட்ட செயலாளரும் மாவட்ட தி.மு.க ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளருமான சிந்தல்பாடி கோ.குபேந்திரன் வரவேற்புரையாற்றி னார்.
மேளதாளம் முழங்க கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் ஊர்வலமாகச் சென்று அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட கழகத் தலைவர் வீ.சிவாஜி, கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் ஆகியோர் இணைந்து மாலை அணிவித்தனர்.
அங்கே நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியார் -அண்ணல் அம்பேத்கர் அவர்களின் படத்துடன் கூடிய பொன்மொழி பலகையை கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் தோழர்கள் முழக்கமிட திறந்து வைத் தனர்.
நிகழ்ச்சியை மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த விடுதலை வாசகர் வட்ட தலைவர் வ.நடராஜன் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் சொ.பாண்டியன், விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் மாயவன்ஆகியோருக்கு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் வீ.சிவாஜி சால்வை அணிவித்து சிறப்பு செய்து பாராட்டினார்.
மாவட்ட செயலாளர் பீம. தமிழ் பிரபாகரன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, விடுதலை வாசகர் வட்ட தலைவர் வ.நடராஜன், மண்டல மாணவர் கழக செயலாளர் இ.சமரசம், மாவட்ட ஆசிரியர் அணி செயலாளர் மு.பிரபாகரன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் பெ.கோவிந்தராஜ், நில அளவையர் கு.சென்னன்,ஊர் துணைத் தலைவர் பெருமாள், ஊராட்சி துணைத் தலைவர் சா.முனுசாமி, திமுக ஒன்றிய பொருளாளர் கோ.முருகன், கூட்டுறவு வங்கி அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி ராஜா, ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் பெ.சிவலிங்கம், அ.தி.மு.க. கிளை செயலாளர் சா.சின்னசாமி, திமுக நிர்வாகி பொ. தங்கம்வேலு, ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
பகுத்தறிவாளர் கழக மாநில கலைத் துறை செயலாளர் மாரி. கருணாநிதி, திராவிடர் கழக மண்டல தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு.யாழ் திலீபன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கதிர்செந்தில், மாநில மாணவர் கழக துணை செயலாளர் செல்லதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன் றிய பொறுப்பாளர் மாயவன், ஒன்றிய பகுத்தறி வாளர் கழகத் தலைவர் பெ.அன்பழகன் ஆகி யோர் கருத்துரையாற்றினார்.
கழக மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி அறிமுக உரையாற்றினார், மாநில திராவிடர்கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் தொடக்க உரையாற்றினார்.
இறுதியாக கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா. பெரியார்செல்வன் உரையாற்றினார்.
கலந்து கொண்டோர்
கூட்டத்தில் பெரியார் பெருந்தொண்டர் கடத் தூர் நெடுமிடல், மாவட்ட மாணவர் கழக செய லாளர் ப.பெரியார், மாவட்ட இளைஞரணி செய லாளர் வினோத் குமார்,ஒன்றிய பகுத்தறிவாளர் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் தனசேகரன், ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் இளங்கோ ஆசிரியர் முருகன், திமுக தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்பா. திலீபன், வேப்பிலைப்பட்டி அரிகரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வெதரம்பட்டி வினோத்குமார்,புட்டிரெட்டிபட்டி செந்தில்குமார், கார்த்திக், கோ.தங்கராஜ் செ.மாதன், வேப்பிலைப்பட்டி திமுக நிர்வாகிகள் தீ.தனபால், மூ.கணேசன், தீ.அமுல்செல்வம்,அ.தமிழரசன், மு.பரமசிவம், கொ.கண்ணப்பன், விடுதலை சிறுத் தைகள் கட்சி நிர்வாகிகள் அ.திருப்பதி, ஆ.சத்தர பதி, அ.தமிழழகன், தீ.தீர்த்தமலை,மு. பார்வதி, நெ.வெற்றிவேந்தன், த.முருகம்மாள், கலா, சுசீலா மற்றும் தாளநத்தம் கிராம மகளிர் சாவித்திரி, செவ்வந்தி, தனலட்சுமி, கலைச்செல்வி, போது மணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் வருகைதந்த அனைவருக்கும் இரவு புலால் விருந்து அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment