தொடரும் இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது படலம் இராமேசுவரத்தில் நாளை வேலைநிறுத்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

தொடரும் இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது படலம் இராமேசுவரத்தில் நாளை வேலைநிறுத்தம்

இராமேசுவரம்,அக்.28- இராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 26.10.2022 அன்று 700-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அன்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மிக்கேல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அதிலிருந்த மீனவர்கள் கிளின்டன், அந்தோனி, வினிஸ்டன், மோசஸ், மரியான், வேல்ராஜ், அந்தோனி ஹானஸ்ட் ஆகிய 7 பேரை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத் தனர். இதையடுத்து, மீனவர்களை விடுவிக்கக் கோரி நாளை (அக். 29) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தையும், தங்கச்சி மடத்தில் ஆர்ப்பாட்டத்தை யும் நடத்துவது என்று மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.


No comments:

Post a Comment