இராமேசுவரம்,அக்.28- இராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 26.10.2022 அன்று 700-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அன்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மிக்கேல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அதிலிருந்த மீனவர்கள் கிளின்டன், அந்தோனி, வினிஸ்டன், மோசஸ், மரியான், வேல்ராஜ், அந்தோனி ஹானஸ்ட் ஆகிய 7 பேரை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத் தனர். இதையடுத்து, மீனவர்களை விடுவிக்கக் கோரி நாளை (அக். 29) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தையும், தங்கச்சி மடத்தில் ஆர்ப்பாட்டத்தை யும் நடத்துவது என்று மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
Friday, October 28, 2022
தொடரும் இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது படலம் இராமேசுவரத்தில் நாளை வேலைநிறுத்தம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment