ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மற்றும் கழகப்பொறுப்பாளர்கள் வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 14, 2022

ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மற்றும் கழகப்பொறுப்பாளர்கள் வரவேற்பு

ஈரோடு,அக்.14- இன்று 14.10.2022 காலை ஈரோட்டிற்கு வருகை புரிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று மாலை ஈரோடு பெரியார் மன்றத்தில் நடை பெறவுள்ள திராவிடர் கழக முதல் பொருளாளர் பழைய கோட்டை தளபதி ந. அர்ச்சுனன் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக ஈரோடு மாநகருக்கு வருகைதந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் கழகப் பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். 

இன்று 14.10.2022 காலை ஈரோட்டிற்கு வருகை புரிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஈரோடு தொடர் வண்டி நிலையத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான திருமகன் ஈ.வெ.ரா.  சால்வை அணிவித்து வரவேற்றார். 

கழக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில் மண்டல தலைவர் இரா.நற்குணன், பேராசிரியர் ப.காளிமுத்து, ஈரோடு கழக மாவட்டத் தலைவர் இரா.சிற்றரசு, ஈரோடு மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், கோபி கழக மாவட்டத் தலைவர் ந.சிவலிங்கம், கோபி கழக மாவட்ட செயலாளர் சென்னியப்பன், கோ.திருநாவுக்கரசு, ஈரோடு மாநகர செயலாளர் வீ.தேவராஜ், ஈரோடு மாவட்ட தொழிலாளரணி செயலாளர் தே.காமராஜ், பகுத்தறிவாளர் கழக ஈரோடு மாவட்ட அமைப்பாளர் பி.என்.எம்.பெரியசாமி, சா.ஜெபராஜ் செல்லத்துரை, கு.குணசேகரன் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் ஈரோடு மாநகர 3ஆவது மண்டல தலைவர் டி.திருச்செல்வம், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் ராஜா ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்றனர்.


No comments:

Post a Comment