தந்தை பெரியார் பிறந்தநாள் விழா - சனாதன எதிர்ப்பு தெருமுனைக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா - சனாதன எதிர்ப்பு தெருமுனைக் கூட்டம்

தூத்துக்குடி, அக். 22- தூத் துக்குடியில் 16-10-2022 அன்று மாலை 6 மணியள வில் தூத்துக்குடி, சிதம்பர நாதர் பேருந்து நிறுத்தம் அருகில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்டச் செயலா ளர் பி. ஜலால் முகம்மது தலைமை வகித்தார். தமி ழர் விடியல் கட்சி மாவட் டப் பொறுப்பாளர் சேமா. சந்தனராஜ் அனைவரை யும் வரவேற்றார். புரட்சி கர இளைஞர் முன்னணி மாவட்டப் பொறுப்பா ளர் சி. சுஜித் முன்னிலை யேற்று உரையாற்றினார். 

திராவிடத் தமிழர் கட்சி சு.க. சங்கர், தமிழ்ப் புலிகள் கட்சி கத்தார் பாலு, தமிழ்க் கழகம் கட்சி செ. ரபீக், சமூக ஆர்வலர் அருந்ததி அரசு உரையாற் றினார்கள். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மா.பால்ராசேந்திரம் சனாதனம் பற்றிய தம் விளக்கவுரையில், தந்தை பெரியார் தம் இறுதிப் பேருரையில் குறிப்பிட்ட, “நம்மை ஈனஜாதி என் கிறான். கோவிலுக்குள் வர வேண்டாம், நீ கல் லைத் தொட்டால் சாமி தீட்டாகிவிடும், என்கி றான்” என்பதை எடுத்துக் கூறித் தடுக்கப்பட்ட அந் தக் கோவிலுக்குள்ளும் நாம் சென்றுவர, சனாத னத்தை நொறுக்கி உரிமை  பெற்றுத் தந்தவர் பெரி யாரே என்றார்.

இறுதியாக, தமிழ் விடியல் கட்சி மாவட்ட மாணவர் கழகப் பொறுப் பாளர் டேனியல் நன்றி கூற நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment