சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகக் கட்டடம் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகக் கட்டடம் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள்,  ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் நேற்று (27.10.2022) சென்னை , நந்தனத்தில் 320 கோடி ரூபாய் செலவில் 12 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி கட்டடமாக கட்டப்பட்டுள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமையகக் கட்டடத்தை திறந்து வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில்,  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  கே.என். நேரு,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர்   பிரதீப் யாதவ்,   வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர்  ஹிதேஸ் குமார் எஸ். மக்வானா,  சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்  எம்.ஏ. சித்திக்,  ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் சிறப்புப் பணி அலுவலர்  ஜெய்தீப் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment