பொறியியல் கல்லூரி சேர்க்கை 30 ஆயிரம் இடங்கள் நிரம்பின - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

பொறியியல் கல்லூரி சேர்க்கை 30 ஆயிரம் இடங்கள் நிரம்பின

சென்னை, அக். 15- சென்னை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 446 பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 1 லட்சத்து 57 ஆயிரம் இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு இணையதள கலந்தாய்வை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. மொத்தம் 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடக்கிறது. இதில் முதல் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் (செப்டம்பர்) 10ஆம் தேதி தொடங்கியது. 

ஒவ்வொரு சுற்று கலந்தாய்விலும் விருப்ப இடங்களை தேர்வு செய்தல், ஒதுக்கீடு செய்தல், அதை உறுதி செய்து இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், கல்லூரிகளில் சேரு தல், காத்திருத்தல் என்ற நடைமுறைகள் பின்பற்றப்படு கின்றன. அதன்படி, ஒரு சுற்று கலந்தாய்வு நிறைவு பெறுவதற்கு, 2 வாரங்கள் வரை ஆகிறது. முதல் சுற்று கலந்தாய்வை பொறுத்தவரையில் கடந்த மாதம் 25ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. 

இந்த கலந்தாய்வு மூலம் 10 ஆயிரத்து 340 மாணவ-மாணவிகள் பொறியியல் கல்லூரிகளில் தங்கள் விருப்ப இடங்களில் சேர்ந்தனர்.

அதன் தொடர்ச்சியாக 2ஆம் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வு 13.10.2022 அன்று காலையுடன் நிறைவு பெற்றது. இதில் 31 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு, இதில் 18 ஆயிரத்து 521 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். அவர்களில் 13 ஆயிரத்து 197 மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்து இருக் கின்றனர். 

இதேபோல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு அடிப்படையிலான 2ஆவது சுற்று கலந்தாய்வில், 1,426 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்த நிலையில், 1,207 பேர் உறுதி செய்து கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். ஆக மொத்தம் 2ஆவது சுற்று கலந்தாய் வில், 14 ஆயிரத்து 404 மாணவ-மாணவிகள் கல்லூரிகள் சேர்ந்து இருப்பதாகவும், 5 ஆயிரத்து 543 பேர் இடங்களை உறுதி செய்து, முதன்மை விருப்ப இடங்களுக்காக காத்திருப்பதாகவும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது. 

இதுவரை நடந்து முடிந்த 2 சுற்றுகள் கலந்தாய்வு முடிவில், மொத்தம் 30 ஆயிரத்து 287 இடங்கள் நிரம்பி இருக்கின்றன. இதனைத்தொடர்ந்து, பொறியியல் 3ஆவது சுற்று கலந்தாய்வு நேற்று முந்தையை நாள் (13.10.2022) முதல் தொடங்கி யுள்ளது. மொத்தம் 49 ஆயிரத்து 42 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் இன்று (15.10.2022) வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment