செவ்வாய்க்கோளில் நீர்? சீனாவின் தியான்வென் -1 விண்கல ஆய்வில் கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 2, 2022

செவ்வாய்க்கோளில் நீர்? சீனாவின் தியான்வென் -1 விண்கல ஆய்வில் கண்டுபிடிப்பு

பெய்ஜிங் அக்.2-  செவ்வாய்க் கோளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தி யக் கூறுகளை சீன அறிவியலா ளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியாகியுள்ள ஆய்வறிக்கை மனிதர்கள் குடியேறு வது குறித்த எதிர்பார்ப்பை அதி கரித்துள்ளது. 

சீனா செவ்வாய்க்கோளை ஆராய அனுப்பிய தியான்வென் -1 விண்கலம் கடந்த மே மாதம் 15ஆம் தேதி செவ்வாய்கோளின் தென்கோலத்தில் உட்டோபியா பிளேனிஷியா என்ற இடத்தில் தரையிறங்கியது. அதிலிருந்து ஜூராங் ரோவர் செவ்வாயின் மேற்பரப்பில் இருந்து இறங்கி ஆய்வு செய்தது. இந்த ரோவர் கடந்த 113 நாட்களில் 1171 மீட்டர் தூரம் பயணித்து செவ்வாயின் மேற்பரப்புக்கு கீழே சுமார் 80 மீட்டர் ஆழம் வரை ஊடுருவி ஆய்வு செய்தது. இதில் கிடைத்த தரவுகள் அடிப்படையில் சீன அறிவியலாளர்கள் எழுதியுள்ள ஆராய்ச்சி அறிக்கை பன்னாட்டு அறிவியல் இதழில் வெளியாகி யுள்ளது. 

செவ்வாய்க்கோள் தன்னகத்தை கொண்டுள்ள தண்ணீரை கடந்த 300 கோடி ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக இழந்து வருகிறது என்ற கருதுகோளுக்கு எதிராக அந்த அறிக்கை அமைந்துள்ளது. பூமியின் மேற்பரப்பை ஊடுருவி ஆராய்ச்சி செய்ததன் மூலம் செவ்வாய்க்கோள் குறித்த புதிய உண்மைகளை சீனா உலகுக்கு வழங்கியுள்ளது.  தண்ணீர் இருப்ப தற்கான அறிகுறிகள் தென்படுவ தாக கூறும் சீனா ஆய்வாளர்கள், செவ்வாயின் சுற்றுச்சூழலிலும், கனிமச் சேர்க்கையிலும் அதன் தாக்கத்தை ஆராய்வதில் அவசியம் என தெரிவித்துள்ளனர். தியான் வென் -1 விண்கலம் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்குவதாகவும் இதுவரை 1500 ஜிகா பைட் தர வுகளை அள்ளித்தந்திருப்பதாகவும் சீனா ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


No comments:

Post a Comment