சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 29, 2022

சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு

சென்னை, செப். 29- தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலை மையிலான சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 2ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பேரணி செல்ல நீதிமன்றம் சென்று அனுமதி கோரின.

அதன்பின்னர் நீதிமன்றமும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய நபர் களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறி யுள்ளது. இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சி னையைக் கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு தடை விதிக்கவேண்டும் என பல்வேறு சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இதனிடையே பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை தடைவித்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் வரும் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஒன்றிய அரசின் தடை எதிரொலியால், தடை உத்தரவை அமல்படுத்தும் விதமாக அரசாணையும் வெளியிட்டுள்ளது. அதில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள அதேநாளில் சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் சில அமைப்புகள் அனுமதி கோரியுள்ளன.

எனவே, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment