மலேசியன் காங்கிரசின் மேனாள் தலைவரும், மலேசியப் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த வருமான துன் ச.சாமிவேலு (வயது 86) அவர்கள் மலேசியா வில் காலமானார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருந்து கிறோம்.
மேனாள் அமைச்சரான துன் ச.சாமிவேலு மலேசிய அரசின் பல்வேறு பொறுப்புகளை வகித் தவர். சிறந்த பேச்சாளர். உலகெங்கும் உள்ள தமிழர் களுக்குப் பெரிதும் அறிமுகமானவர்.
சிறிது காலமாகவே அவர் உடல் நலம் குன்றியிருந்தார்.
தமிழ்நாட்டில் பல தலைவர்களுக்கும் - குறிப்பாக முத்தமிழறிஞர் கலைஞருக்கும், நமக்கும் நன்கு அறிமுகமானவர்.
திருச்சியில் நடைபெறும் பெரியார் மருந்தியல் கல்லூரியில் " 'டத்தோ' எஸ். சாமிவேலு - இந்திராணி பிளாக்" என்று ஒரு கட்டடத்திற்குப் பல ஆண்டு களுக்கு முன்பே பெயர் சூட்டப்பெற்றது.
அவரது மறைவு ஈடு செய்ய இயலாத பேரிழப்பு ஆகும்.
அவரை இழந்து வருந்தும் அவரது வாழ் விணையர் 'டத்தின்' திருமதி இந்திராணி, அவரது பிள்ளைகள், குடும்பத்தினருக்கு திராவிடர் கழகம் (தமிழ்நாடு) சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, ஆறுதல் கூறுகிறோம்.
அவருக்கு நமது வீர வணக்கம்.
No comments:
Post a Comment