கரோனாவுக்கு மூக்குவழி தடுப்பு மருந்து அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

கரோனாவுக்கு மூக்குவழி தடுப்பு மருந்து அனுமதி

புதுடில்லி, செப். 8- கரோனா வைரஸ் பெருந்தொற் றுக்கு எதிராக அய்தரா பாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக செலுத் தக்கூடிய தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. 

இந்த தடுப்பு மருந்து சுமார் 4 ஆயிரம் தன்னார் வலர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதில் பக்க விளைவு களோ, விரும்பத்தகாத பிற விளைவுகளோ ஏற் பட்டதாக தகவல் இல்லை. இந்த தடுப்பூசியின் அவ சர கால பயன்பாட்டுக்கு அனுமதி கேட்டு விண் ணப் பிக்கப்பட்டிருந்தது. இதைப் பரிசீலித்து இந் திய தலைமை மருந்து கட் டுப்பாட்டாளர், இந்த மூக்கு வழிதடுப்பு மருந் துக்கு தனது அனுமதியை வழங்கியது.

இதை ஒன்றிய சுகா தார அமைச்சர் மன்சுக் மாண்டவியா 6.9.2022 அன்று டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பு மருந்து, கரோனா வுக்கு எதிரான கூட்டுப் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பு மருந்து 18 வயதுக்கு மேற்பட்டோ ருக்கு பயன்படுத்தப்படும்.

No comments:

Post a Comment