பெரியார் உலகத்திற்கு நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 16, 2022

பெரியார் உலகத்திற்கு நன்கொடை

தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக்குடி பொறியாளர் சு.பழநி ராசன்-பங்கயற்செல்வி இணையரின் மணவிழா 50ஆம் ஆண்டு (பொன் விழா), சு.பழநிராசனின் 75ஆம் ஆண்டு பிறந்த நாள் (10.9.2022) பவளவிழா மகிழ்வாக கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.10,000 வழங்கினர்.

- - - - -

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அறந்தாங்கி ஆசிரியர் பன்னீர்செல்வம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.500 வழங்கினார்.

- - - - -

தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன் ராஜியின் மகள் மு.கனிமொழியின் பிறந்தநாள் 16.9.2022 அன்று  மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 200 நன்கொடை வழங்கி மகிழ்ந்தார்கள். வாழ்த்துகள். நன்றி.

- - - - -

சுயமரியாதை சுடரொளி கெடார் சு.நடராசன்- சவுந்தரி நடராசன் மகன் ந.கதிரவன்-வெண்ணிலா இணையரின் 23ஆம் ஆண்டு இணையேற்பு விழா, வெண்ணிலா 46ஆவது பிறந்த நாள் (16.9.2022) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடை ரூ.300 அளிக்கப்பட்டது.


No comments:

Post a Comment