தஞ்சை, செப். 15- 11.09.2022 ஞாயிறு அன்று மாலை 6:30 மணி அள வில் தஞ்சாவூர் ஒன்றிய மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் தஞ்சாவூர் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் நடை பெற்றது.
இக்கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையேற்று உரையாற்றினார். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், மண்டல தலைவர் மு.அய்யனார் ஆகியோர் முன் னிலை ஏற்று உரையாற்றினார். திராவிடர் கழக பொதுச்செயலா ளர் இரா.ஜெயக்குமார் கலந்து கொண்டு கருத்துரை நிகழ்த் தினார்.
இக்கூட்டத்தில் மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் சித்தார்த்தன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கோபு.பழனிவேல் மண் டல மகளிர் அணி செயலாளர் அ.கலைச்செல்வி, தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் இரா.சேகர், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலா ளர் நெல்லுப்பட்டு இராமலிங் கம், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் கா.அரங்கராசன், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் கரந்தை அ.டேவிட், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ச.அழகிரி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பாவலர் பொன்ன ரசு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநகர இளை ஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வம், சட்ட கல் லூரி மாணவர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் மா.ஓவியா, சித்திரக்குடி இளவரசன், மாவட்ட மாணவர் கழக துணை செயலாளர் ஏ.விடுதலைஅரசி, மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியா ளர் ஜெயமணி குமார், மாணவர் கழக தோழர் நிலவன், ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற் றினர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம் 1
06.09. 2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் தலை மையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது
தீர்மானம் 2
தமிழர் தலைவர், விடுதலை ஆசிரியரின் 60 ஆண்டுகால பணியை பாராட்டி தஞ்சை மாவட்டம் சார்பாக வழங்கப் பட்ட விடுதலை சந்தா சேர்க்கும் பணியில் ஈடுபட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கழக பொறுப்பாளர்கள் தோழர்க ளுக்கும், தமிழர் தலைவர் அவர் களால் பாராட்டும் அளவிற்கு ஒன்றிய அளவில் 800க்கும் மேற் பட்ட சந்தாக்களை வழங்கிய ஒரத்தநாடு ஒன்றிய பொறுப்பா ளர்கள் மற்றும் தோழர்களுக்கும், தஞ்சை நகரில் நேரில் வந்து வசூல் பணியை துவக்கிவைத்து சிறப்பித்த தமிழர் தலைவர் அவர்களுக்கும் நன்றியையும் பாராட்டையும் இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 3
பெரியார் 1000 வினா விடை போட்டி தேர்வு தஞ்சை மாவட் டம் சார்பில் 3000 மாணவர்கள் பங்கு பெற்று போட்டி தேர்வு எழுத ஒத்துழைப்பு தந்த கழகப் பொறுப் பாளர்களுக்கு இக்கூட் டம் பாராட்டையும் வாழ்த்துக் களையும் தெரிவித்துக்கொள் கிறது.
தீர்மானம் 4
தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா, சுயமரியாதை நாள் செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஒன்றியம் நகரம் முழுவதும் காலை 8 மணிக்கு ரெட்டிபாளையம் துவங்கி கொடியேற்றி இனிப்பு வழங்கி தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடு வது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 5
தஞ்சை மாநகரத்தில் வரும் 24.09.2022 சனிக்கிழமை அன்று பெரியார் பட ஊர்வலத்தை மிகச் சிறப்பாக நடத்துவது எனவும், செப்டம்பர் 17 அன்று பெரியார் பிறந்த நாள் விழாவை விளம்பரப்படுத்திட சுவரெ ழுத்து, சுவரொட்டி பிரச்சா ரத்தை சிறப்பாக செய்வது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 6
தஞ்சாவூர் ஆர்.ஆர்.நகரில் திரா விடர் மாணவர் கழகம் சார்பில் வழக்குரைஞர் செ.மெ.மதிவதனி பங்கேற்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட் டத்தில் கழகத் தோழர்கள், பொது மக்கள் திர ளாக பங்கேற்பது என முடிவு செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment