ஹிந்தியா அல்ல - இந்தியாதான்! தமிழை ஒன்றிய அலுவல் மொழியாக அறிவியுங்கள்: முதலமைச்சர் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 15, 2022

ஹிந்தியா அல்ல - இந்தியாதான்! தமிழை ஒன்றிய அலுவல் மொழியாக அறிவியுங்கள்: முதலமைச்சர் கருத்து

சென்னை, செப்.15 இந்தி தினம் கொண்டாட எதிர்ப்பு தெரிவித் துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழை ஒன்றிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளார்.  ஆண்டு தோறும் செப்டம்பர் 14-ஆம் நாள் 'இந்தி திவஸ்' என்ற பெயரில் இந்தி மொழி நாள் கொண்டாடப்படு கிறது. அதற்கான விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "நமது கலாசாரம், வரலாற்றை  புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை நாம் கற்கவேண்டும்" என்றும், "நாட்டின் ஆட்சி நிர்வாகம், ஆராய்ச்சி ஆகியவை நம் உள்ளூர் மொழி மற்றும் அலுவல் மொழிகளில் நடக்க உறுதியேற்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார். ஒரு மொழிக்குரிய நாளில் அதன் பெருமைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைப்பது இயல்பானது. ஆனால், கலாசாரத்தையும், வரலாற் றையும் புரிந்துகொள்ள இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்தியாவில் 'வேற்றுமை யில் ஒற்றுமை' என்ற பண்பாட்டுக்கு நேர் எதிரானது. இந்தியாவின் வரலாறும், பண்பாடும் இந்தி மொழியில் புதைந்திருக்கவில்லை. இந்தி என்ற மொழி உருவாவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழை முதன்மை மொழியாக கொண்ட திராவிட மொழி குடும் பமும், அதன் பண்பாட்டு விழுமி யங்களும் இன்றைய இந்திய நிலப் பரப்பையும், அதன் எல்லைகளை கடந்தும் பரவியிருந்ததை வரலாற் றாசிரியர்கள் பலரும் எடுத்துக் காட்டியுள்ளனர்.

வரலாறு தெற்கில் இருந்து எழுதப்பட வேண்டும்

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கி தந்த பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கரும் இதன் அடிப்படையில் தனது ஆய்வு முடிவுகளை பதிவு செய்திருக்கிறார். இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து எழுதப்பட வேண்டும் என் பதே வரலாற்று ஆராய்ச்சியாளர் களின் முடிவு. அப்போதுதான் உண்மையான கலாசாரத்தையும், வரலாற்றையும் அறிந்துகொள்ள முடியும் என்பதை அழுத்தம், திருத்தமாக குறிப்பிட்டிருக்கி றார்கள். 

அத்தைகைய சிறப்பு வாய்ந்த தமிழையும், மற்ற மாநில மொழிகளையும் பின்னுக்கு தள்ளி இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்ற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும். அந்த ஆதிக்க உணர்வை எதிர்த்து தாய்மொழி காத்திட தீக்குளித்து, தங்கள் இன்னுயிரை தமிழுக்கு ஈந்த தியாக வரலாற்றைக்கொண்டது எங்கள் தமிழ்நாடு. இந்தி சட்டப்படியான தேசிய மொழியும் அல்ல, அது மட்டுமே ஆட்சி மொழியும் அல்ல. ஒன்றிய அரசின் அலுவல் மொழி யாக இந்தி உள்ளது. அதுபோலவே, இணை அலுவல் மொழியாக ஆங் கிலம் உள்ளது. உள்துறை அமைச் சர், இந்தியை உயர்த்திப் பிடிப்ப தற்காக, 'உள்ளூர் மொழி'களையும் தனக்கு கூட்டாளியாக சேர்த்துக் கொண்டு பேசியிருக்கிறார். இந்தி பேசும் மாநிலங்கள் என சொல் லப்படும் பகுதிகளில் பேசப்பட்டு வந்த மைதிலி, போஜ்புரி, சந்தாலி, அவதி உள்ளிட்ட பல மொழிகள் இந்தி மொழியின் ஆதிக்கத்தால் அழிவின் விளிம்பில் இருப்பதை மொழி அறிஞர்கள் ஆய்வுப் பூர்வமாக எடுத்துக்காட்டியிருக் கிறார்கள். அந்த மொழிகளை மீட்க, உள்ளூர் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் இன்றைய நிலை.

ஹிந்தியா என்ற பெயரில் பிளவுபடுத்த வேண்டாம்

 அலுவல் மொழியான இந்தியின் ஆதிக்கத்தில் இருந்து தமிழ் உள் ளிட்ட இந்தியாவின் தனித்தன்மை மிக்க மொழிகளை காப்பதற்காக அரசியல் சட்டத்தின் வழியே போடப்பட்ட வேலிதான் இணை அலுவல் மொழி என்ற ஆங்கிலம். இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அளித்த உறுதிமொழியின் காரணமாக அந்த வேலி இன்றளவும் வலுவாக இருப்பதால்தான் பல்லாயிரம் ஆண்டுகளாக இலக்கண-இலக்கிய வளத்துடன் செழித்து வளர்ந்து நிற்கும் செம்மொழியாம் தமிழ் மொழியை ஆதிக்க மொழி ஆடுகளால் மேய முடியவில்லை. உள்ளூர் மொழிகள் மீது ஒன்றிய அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் சமஸ்கிருதம்-இந்தி மொழிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதிக்கும், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு ஒதுக்கப்படும் நிதிக்கும் உள்ள மலையளவு வேறுபாட்டினை உணர்ந்து, அதனை சமன்படுத்து வதே சரியான நடவடிக்கையாக இருக்கும். அதற்கு மாறாக, தேசிய கல்வி கொள்கை வழியாக இந்தி-சமஸ்கிருத மொழிகளை திணிப் பதற்கான முயற்சிகளிலேயே ஒன் றிய அரசு முனைப்பாக இருக்கிறது. 'ஹிந்தி'யா இது ஒருமைப்பாடு மிக்க இந்தியா. அதனை 'ஹிந்தி'யா என்ற பெயரில் பிளவுபடுத்தி பார்க்கும் முயற்சிகள் வேண்டாம் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். உள்ளூர் மொழிகள் பாதுகாக்கப் பட வேண்டுமென்றால், அரசியல் சட்டத்தின் 8ஆ-வது அட்டவணை யில் தற்போது இடம் பெற்றுள்ள 22 மொழிகளை, உங்கள் வார்த் தைகளிலேயே சொல்லவேண்டு மென்றால் உள்ளூர் மொழிகளை இந்திக்கு இணையாக, ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக விரைவில் அறிவியுங்கள். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக்கி, இந்தி தினத்துக்கு பதில் 'இந்திய மொழிகள் நாள்' என கொண்டாடி கலாசாரத்தையும், வரலாற்றையும் வலுப்படுத்துங்கள். 

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.


No comments:

Post a Comment