மகத்தான மனிதநேயம் விபத்தில் மணமகன் மரணம் உடல் உறுப்புகள் கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

மகத்தான மனிதநேயம் விபத்தில் மணமகன் மரணம் உடல் உறுப்புகள் கொடை

திருப்போரூர்,செப்.13-   திருப்போரூரை அடுத்துள்ள கண்ணகப்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் - கலா தம்பதிகளது மகன் ராஜ்.   செப். 12ஆம் தேதி (நேற்று) திருப்போரூரில் திருமணம் நடக்கவிருந்தது.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி,  திருப்போரூரில் இருந்து கேளம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த தையூர் யோவான் என்பவரின் இரு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக  வந்து மோதியது.

 இதில் ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து  சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித் தனர். இதையடுத்து அவரது உறவினர்கள் ஆலோசனை செய்து ராஜின் உடல் உறுப்புகளை கொடை செய்வதாக தெரிவித்தனர்.

திருமணம் நடைபெற இருந்த நிலை யில் மணமகன் விபத்தில் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உடல் உறுப்பை கொடையளித்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


No comments:

Post a Comment