இந்தியாவின் முன்னணி மாட்டிறைச்சி ஏற்றுமதி யாள ரான சன்னி கட்டர் உதிர்க்கும் தத்துவம் இது.
எனது வட இந்தியப் பயணத்தில் எங்குமே மாட்டிறைச்சி உணவு கிடைக்கவே இல்லை. மாடுகளை தெய்வமாக நினைப்பதால் வட மாநிலங்கள் அனைத்திலும் மாட்டிறைச்சிக்கு தடையாம். நல்லது..!
அங்குள்ள விவசாயிகளிடமும், குடியானவர் களிடமும் கேட்டேன் "நீங்கள் வளர்க்கும் மாடு களை சந்தையில் விற்க முடியாது. வேறு என்னதான் செய்வீர்கள்..?"
"மாடுகளை மொத்தமாக விலைபேசி வாங்கிச் செல்வார்கள். எங்கு கொண்டு செல்வார்கள் என தெரியாது"
இப்போது புரிந்தது.... மாட்டிறைச்சி தடையால் இவர்களால் சந்தையில் மாடுகளை விற்க முடியாது. தரகர்களிடம்தான் விற்றாக வேண்டும். ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மாடுகளை ரூ.2 ஆயிரத்திற்கு தரகர்கள் கேட்டாலும் கொடுத்துத்தான் ஆக வேண்டும் - வேறு வழியில்லை.
தரகர்கள் வாங்கிச் செல்லும் கடவுள்களை - கோமாதாக்களை எங்கே அழைத்து செல் கிறார்கள்...?
பிரேசில், ஆஸ்திரேலியாவிற்கு அடுத்து மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தது. 'ஜீ' பிரதமரான பிறகு அதாவது இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ண தடை செய்யப்பட்ட பிறகு மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.
மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னிலையில் இருக்கும் மாநிலம் எது தெரியுமா..?
சாமியார் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம்தான். அடுத்ததாக மகாராட்டிரா, பீகார், பஞ்சாப், ஆந்திரா இருக்கின்றன.
400 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய மாட்டிறைச்சிக் கூடம் உத்தரப் பிரதேசத்தின் முசாபர்பூரில் அமைந் திருக்கிறது. இதன் உரிமையாளர் சுனில் சூட்.
அடுத்ததாக A.O.P Exports எனும் மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் உ.பி.யின் உன்னா எனும் நகரத்தில் இருக்கிறது.இதன் உரிமையாளர் ஓ.பி.அரோரா என்பவர். வேடிக்கை என்ன வென்றால் இந்த உன்னா நகரில்தான் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இரண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த அப்பாவிகள் 'பசு காவலர்களால்' கொல்லப்பட்டனர்.
மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை யாரெல்லாம் நடத்தி வருகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
அல் கபீர் எக்ஸ்போர்ட்ஸ்- சதீஷ் சுபர்வால்
எம்.கே.ஆர். எக்ஸ்போர்ட்- மதன் ஏவட்
ஏவட் கோல்ட் ஸ்டோரேஜ்- ஷனி ஏவட்
அரேபியன் எக்ஸ்போர்ட்- சுனில் கபூர்
அல் நூர் எக்ஸ்போர்ட்- சுனில் சூட்
A.O.V Agro food- அபிஷேக் அரோரா
ஸ்டாண்டர்ட் ஃபுட்- கமல் வர்மா
பொன்னே ப்ராடக்ட் எக்ஸ்போர்ட்- சாஸ்திரி குமார்.
அஸ்வினி அக்ரோ எக்போர்ட்- ராஜேந்திரன்
மகாராட்டிரா ஃபுட்ஸ் பிராசசிங்- சன்னி கட்டார்
கனக் டிரேடர்ஸ் - ராஜேஷ் சுவாமி
இதில் எவரும் இஸ்லாமியர்களோ கிறிஸ்த வர்களோ கிடையாது. அத்தனை பேரும் பசுவை தெய்வமாக மதிக்கும் மதத்தை சார்ந்தவர்கள். பெரும்பாலும் பார்ப்பனர்கள்.
2015இல் சீனா சென்ற இந்திய பிரதமர் 'ஜீ' அரிசி, மசாலா பொருட்களுடன் 'பீப்' ஏற்றுமதிக்காகவும் தடையில்லா ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டு தான்நாடு திரும்பினார். கம்போடியா வழியாக சீனா சென்ற நம்மூர் மாட்டிறைச்சி தற்போது நேரடி யாகவே சீனாவிற்கு ஏற்றுமதி ஆகிறது.
2026 இல் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தை பிடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது..!
'கொன்றால் பாவம்... தின்றால் போச்சு'
இதுதான் பார்ப்பனர்களின் தந்திரம் - வெளியே கடவுளின் பெயரால் கலவரம்.. உள்ளே கடவுள் பெயரால் வியாபாரம்.... இது எங்கே எப்போது நம்மாளுங்களுக்கு... புரியப் போவதோ...தெரியல.
(சமூக ஊடகப் பதிவில் இருந்து)
No comments:
Post a Comment