சென்னை,செப்.13- திமுக முன்னோடி பெ.சு.திருவேங்கடம் மறைவுற்றார். திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் வருமாறு:
ஒன்றிணைந்த வடார்க்காடு மாவட்டத்தில் தி.மு.க.வை வளர்த்த மூத்த முன்னோடியும் திமுக சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளருமான பெ.சு.திருவேங்கடம் அவர்கள் நேற்று (12.9.2022) இரவு உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். தாம் தி.மு.க.வுக்கு ஆற்றிய பணிகளுக்காக 2017-ஆம் ஆண்டு முப்பெரும் விழாவில் "அண்ணா விருது" பெற்ற பெருமைக்குரியவர் பெ.சு. திருவேங்கடம் அவர்கள்.
அவரை இழந்து வாடும் அவரது மகன் - கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணன் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் திருவண்ணாமலை மாவட்டத் தி.மு.க.வினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன். - இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment