அமித்ஷாவின் இந்தி வெறிப் பேச்சைக் கண்டித்து அக்.6இல் ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 26, 2022

அமித்ஷாவின் இந்தி வெறிப் பேச்சைக் கண்டித்து அக்.6இல் ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

சென்னை,செப்.26 ஒன்றிய பாஜக அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி வெறி பேச்சைக் கண்டித்து ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் 6.10.2022 அன்று நடைபெறுகிறது.

 இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி அவர்களின் மறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட, இந்தி எதிர்ப்பு கண்டன ஆர்ப் பாட்டம், மீண்டும் 06.10.2022 அன்று மாலை நடைபெற உள்ளது. அமித்ஷாவின் இந்தி வெறி பேச்சுக்கு - போக்குக்கு கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 06.10.2022 வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு என்னுடைய தலைமையில் நடைபெற்ற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ் உணர்வாளர்களையும், கழகத் தோழர்களையும் அன்புடன் அழைக்கிறேன்.

இவ்வாறு வைகோ குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment