இந்தியாவில் புதிதாக 5383 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

இந்தியாவில் புதிதாக 5383 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

புதுடில்லி,செப்.24- ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று (23.9.2022) காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 5,383 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்று பாதிப்புடன் 45,281 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,424 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். ஒட்டு மொத்தமாக நாட்டில் 217.26 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு 

தமிழ்நாட்டில் நேற்று ஆண்கள் 265, பெண்கள் 264 என மொத்தம் 529 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 111 பேர் தொற் றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 79,368 ஆக அதிகரித் துள்ளது.

இதுவரை 35 லட்சத்து 36,027 பேர் குணமடைந்துள் ளனர். நேற்று மட்டும் 463 பேர் குணமடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் 5,297 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று நோய்த்தொற்று பாதிப்பால் இரண்டு பேர் உயிரி ழந்துள்ளனர்.


No comments:

Post a Comment