தமிழ்நாட்டில் புதிதாக 482 பேருக்கு கரோனா பாதிப்பு : ஒருவர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 482 பேருக்கு கரோனா பாதிப்பு : ஒருவர் உயிரிழப்பு

சென்னை,செப்.3- தமிழ்நாட்டில் நேற்று ஆண்கள் 288, பெண்கள் 194 என மொத்தம் 482 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 75 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 69,624 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 35 லட்சத்து 26,532 பேர் குணமடைந்துள் ளனர். இன்று மட்டும் 518 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழ்நாடு முழுவதும் 5,056 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று ஒருவர் உயிரிழந்துள் ளார். தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினம் கரோனா தொற்று பாதிப்பு 485 ஆகவும், சென்னையில் 72 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளது.


No comments:

Post a Comment