ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகளின் வன்முறை - அக்.2இல் சமூகநல்லிணக்க மனிதசங்கிலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 27, 2022

ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகளின் வன்முறை - அக்.2இல் சமூகநல்லிணக்க மனிதசங்கிலி

சென்னை,செப்.27-சிபிஅய் (எம்) மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், சிபிஅய் மாநில செய லாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. ஆகியோர் வெளியிட் டுள்ள கூட்டறிக்கை வருமாறு,

அண்மைக் காலமாக தமிழ் நாட்டில் வெறுப்பு அரசியலை விதைத்து வன்முறைகளைத் தூண்டி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில்  பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்ட முயற் சிகளை மேற்கொண்டு வரு கின்றன.

தற்போது கோவையை மய்யப்படுத்தி இந்த முயற்சிகள் முனைப்புடன் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாள்களாக ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சுகளும் நடைபெற்று வருகின் றன. இவற் றிற்கு காரணமான அனைவரையும் காவல்துறை விரைந்து கைது செய்து சிறைப் படுத்த வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், நச்சு அரசியலுக்கு இடமளிக்க வேண்டாமென தமிழ்நாடு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பாதுகாக்க மாநில அரசு உரிய நடவடிக்கை களை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை யாம் வரவேற்கிறோம்.

அத்துடன் மதரீதியில் மக் களைப் பிளவுபடுத்தும் சங்பரி வார்களின் முயற்சிகளைப் புறக் கணிப்பதோடு  அவற்றை முறி யடிக்க முன்வர வேண்டுமென்றும், எவ்வித ஆத்திரமூட்டலுக்கும் இரையாகி விடக் கூடாது என்றும் பொது மக்களை கேட் டுக் கொள்கிறோம்.

காந்தியாரின் பிறந்த நாளை தேர்வு செய்து தமிழ் நாட்டில் 50 இடங்களில் அணி வகுப்பு நடத்தப்போவதாக ஆர். எஸ்.எஸ். அறிவித்திருக்கிறது. காந்தியடிகளை படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான ஆர்.எஸ்.எஸ். இத்தகைய நட வடிக்கையில் ஈடுபடுவது அரசி யல் உள்நோக்கம் கொண்டதா கும். மேலும் அவர்கள் அணி வகுப்பு நடத்துவதற்கு அனுமதி யளிக்கும்படி தமிழ்நாடு காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் வழி காட்டுதலைத் தந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்நிலையில், சங்பரிவார் களின் இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டிக்கிற வகை யிலும், தமிழ்நாட்டில் சமூக நல் லிணக்கத்தைப் பாதுகாக்கிற வகையிலும் அக்டோபர் 2 அன்று மாலை 4 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” நடைபெறவுள்ளது. இந்த மனிதச் சங்கிலியில் அனைத்துத் தரப்பு, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

மக்கள் ஒற்றுமை, மதச்சார் பின்மை, மத நல்லிணக்கம், சமூக அமைதி, மாநில வளர்ச்சி ஆகிய வற்றை காப்பாற்றும் முயற்சியின் ஒரு நடவடிக்கையே இது. இதற்கு தமிழ்நாடு மக்கள் தங்கள் முழு ஆதரவையும் நல்க வேண்டு மெனக் கேட்டுக் கொள்கிறேம்.

-இவ்வாறு சிபிஅய் (எம்) மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், சிபிஅய் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல் திருமா வளவன் எம்.பி.வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.


No comments:

Post a Comment