- Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 15, 2022

1. மகாபாரதம் கூறும் நீதி

பிராமணப் பெண்ணுக்கும் சூத்திர ஆணுக்கும் பிறப்பவன் கண்டிப்பாக கொடியவனாகத்தான் இருப்பான். ஒருவன் கொடியவனாக இருப்பதை வைத்தே அவன் பிராமணனுக்கு பிறக்கவில்லை என்பதைக் கண்டுபிடித்து விடலாம். பிராமணனுக்கு பிறந்தவர்கள் கொடியவராக இருப்பதில்லை.

கிருஷ்ண யஜுர் வேதத்தில், 7.1.1 என்கிற சுலோகத்தின் மொழிபெயர்ப்பு ஒன்றிய அமைச்சகத்தின் வலைத்தளத்தில் இருக்கிறது

தலையில் இருந்து பிராமணன் பிறந்தான், தோளில் இருந்து சத்திரியன் பிறந்தான் என்று வேதத்தில் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம்

தலையில் இருந்து பிராமணன் மட்டும் பிறக்கவில்லையாம். அக்கினியும் பிறந்தானாம். வெள்ளாடும் பிறந்ததாம். அதே போல, தோளில் இருந்து சத்திரியனும் பிறந்தான், இந்திரனும் பிறந்தான், பள்ளை ஆடும் பிறந்தது. வயிற்றில் இருந்து, வைசியனும் பிறந்தான், விசுவே தேவர்களும் பிறந்தார்கள், பசுவும் பிறந்தது. காலில் இருந்து சூத்திரனும் பிறந்தான், குதிரையும் பிறந்தது, ஆனால் எந்த தேவர்களும் பிறக்கவில்லை. 

ஆகவே, பிராமண சத்திரிய வைசியர்கள் என்ற மூவண்ணத்தார்க்கு பணிவிடை செய்வதே  சூத்திரர்களுக்கும் குதிரைக்கும் இடப்பட்ட பணிகள். சூத்திரர்களுக்கு யாகம் செய்யும் உரிமை கிடையாது. காலில் இருந்து பிறந்தமை கொண்டே, சூத்திரர்களும் குதிரையும் காலினால் செய்யும் தொழிலால் பிழைக்கின்றனர்.

2. இஸ்கான் அமைப்பை உருவாக்கிய சாமியார் பிரபுபாதா  அளித்த பேட்டியில்

...சூத்திரர்கள் நாயைப் போன்றவர்கள். நான்காம் தர மனிதர்கள். அவர்களுக்கு நல்ல எசமானர் வேண்டும். எசமானர் இல்லாத சூத்திரர்கள் தெருநாயைப் போன்றவர்கள். கலியுகத்தில் சூத்திரர்கள்தான் பெரும்பான்மையாக இருப்பார்கள்"

இந்தக் காட்சிப் பதிவு சமூவலைதளங்களில் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது

3. சூத்திரர்கள் முட்டாள்களாம் - பிஜேபி எம்.பி. 

ரிsலீணீtக்ஷீவீஹ்ணீ ளீஷீ ளீsலீணீtக்ஷீவீஹ்ணீ ளீமீலீ பீஷீ, தீuக்ஷீணீ ஸீணீலீவீ றீணீரீtணீ. ஙிக்ஷீணீலீனீவீஸீ ளீஷீ தீக்ஷீணீலீனீவீஸீ ளீமீலீ பீஷீ, தீuக்ஷீணீ ஸீணீலீவீ றீணீரீணீ. க்ஷிணீவீsலீஹ்ணீ ளீஷீ ஸ்ணீவீsலீஹ்ணீ ளீமீலீ பீஷீ, தீuக்ஷீணீ ஸீணீலீவீ றீணீரீtணீ. ஷிலீuபீக்ஷீணீ ளீஷீ sலீuபீக்ஷீணீ ளீமீலீ பீஷீ, தீuக்ஷீணீ றீணீரீ ழீணீtணீ லீணீவீ. ரிணீணீக்ஷீணீஸீ ளீஹ்ணீ லீணீவீ? ரிஹ்uஸீளீவீ sணீனீணீழீலீ ஸீணீலீவீ ஜீணீணீtமீ: ஙியிறி விறி றிக்ஷீணீரீஹ்ணீ ஷிவீஸீரீலீ ஜிலீணீளீuக்ஷீ வீஸீ ஷிமீலீஷீக்ஷீமீ, விறி 

 சத்திரியர்களை சத்திரியர்கள் என்றால் யாருக்கும் வலிப்பதில்லை. பிராமணர்களை பிராமணர்கள் என்று அழைத்தால் யாருக்கும் தவறாகப்படுவதில்லை. வைசியர்களை வைசியர்கள் என்று அழைத்தால் அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். 

 ஆனால் சாஸ்திரம் வகுத்த விதிகளின் படி சூத்திரர்கள் என்று கூறினால் பலருக்கும் கோபம் வருகிறது, ஏதோ அசிங்கத்தை மிதித்தது போல் பார்க்கிறார்கள் - ஏன்? ஏனென்றால் சூத்திர்கள் சாஸ்திரவிதிகளை புரிந்துகொள்ளாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு (சூத்திரர்களுக்கு) புரிதல் இல்லை.

 பாஜக போபால் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் மத்தியப் பிரதேசம் சேஹூர் என்ற இடத்தில் 13.12.2020 - அன்று பேசியது.

இதைப்பற்றி எல்லாம் நாராயணன்களும் அண்ணாமலைகளும் வாய் திறக்க மாட்டார்களா?

நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு  ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். ('தெய்வத்தின் குரல்' முதல் பாகம் பக்கம் 267-268)

கிறித்தவர்களை இழித்தும், பழித்தும் ஏகடியம் செய்யும் கூட்டம் அந்தவெள்ளைக்கார கிறித்தவன் வைத்த பெயரைச் சூட்டிக் கொண்டு திரிவது வெட்கமாக இல்லையா? 

No comments:

Post a Comment