விருதுநகர் மாவட்டத்தில், 26.8.2022 அன்று காலை 9.30 மணிக்கு, ஹவ்வா பீவி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சி.பி.அய். நகரச் செயலாளர் தோழர் முத்துக்குமார் பெரியார் 1000 வினா - விடைத் தேர்வைத் தொடங்கி வைத்தார். ரோசல்பட்டி K.K.S.S.N. நடுநிலைப் பள்ளியில் மாநில ப.க. துணைத்தலைவர் கா.நல்லம்பி தொடங்கி வைத்தார். V.P.P மேல்நிலைப் பள்ளியில் பொதுக்குழு உறுப்பினர் வெ.புகழேந்தி தொடங்கி வைத்தார். சாத்தூர் எத்தல் ஹார்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ப.க. அமைப்பாளரும், நகர் மன்றத் துணைத் தலைவருமான பா.அசோக் தொடங்கி வைத்தார். 10 மணி அளவில் நடைபெற்ற தேர்வில் 18 பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். மாவட்ட கழக செயலாளர் விடுதலை தி.ஆதவன், மாநில ப.க. துணைத் தலைவர் கா.நல்லதம்பி, மாவட்ட ப.க. அமைப்பாளர் பா.அசோக் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோருடன் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழக பேராசிரியர்கள் தேர்வை ஒருங்கிணைத்து நடத்தினர்.
Thursday, September 1, 2022
விருதுநகர் மாவட்டத்தில் பெரியார் 1000
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment