சித்திரக்குடி சு.பழநிராசன் - பங்கயற் செல்வி பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.10,000 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 15, 2022

சித்திரக்குடி சு.பழநிராசன் - பங்கயற் செல்வி பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.10,000

தஞ்சை, செப். 15- தஞ்சாவூர் மாவட்டம், சித்திரக்குடி பொறியாளர் சு.பழநி ராசன் - பங்கயற்செல்வி ஆகியோ ரின் 50-ஆம் ஆண்டு திருமணப் பொன்விழா, சு.பழனிராசன் அவர்களின் 75-ஆம் அகவைப் பவளவிழா 10-.9.-2022 அன்று முற்பகல் 11 மணிக்கு தஞ்சாவூர் அய்ஸ்வரியம்திருமண மண்டபத் தில் நடைபெற்றது. வழக்குரைஞர் சு.பாலகிருஷ்ணன் வரவேற்று உரை யாற்றினார்

உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை வகித்து பாராட்டுரை வழங்கினார். திராவிடர் கழகப் பொதுச்செயலா ளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி. அமர்சிங், திருவையாறு மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ரெத்தினசாமி, சி.பி.அய் (எம்) மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், சி.பி.அய். மாவட்ட செயலாளர் முத்து.உத்தராபதி, எஸ்.கே.எம் மாநில ஒருங்கிணைப் பாளர் க.பாலகிருஷ்ணன், தமிழ்த் தேசிய முன்னணி அய்யனாபுரம் சி.முருகேசன், காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்டத் தலைவர் பி.ஜி. இராஜேந்திரன், சிபிஅய் செயற்குழ உறுப்பினர். கோ.நீலமேகம், விவசாய சங்க மாநில செயலாளர் சாமி.நடராசன், மக்கள் அதிகாரம் காளியப்பன், எஸ்கேஎம் மாநில செயலாளர் மேரி லில்லி பாய், விவசாய சங்கம் மணிமொழியன், முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் ஜெயினுலாதீன், சிமியோன் சேவியர் ராஜ், தி.மு.க ஒன்றிய செயலாளர் இரா.உலகநாதன், காங்கிரஸ்ஆண்டவர், கனகராஜ் ஆகியோர் வாழ்த்துரை மற்றும் பாராட்டுரையாற்றினார்கள்.

இறுதியாக பொறியாளர் சு.பழநிராசன் ஏற்புரையாற்றினார் பொறியாளர் கென்னடி தொகுப் புரையாற்றினார். தொழிலதிபர் சு.கிள்ளிவளவன் நன்றி கூறினார்.

திராவிடர் கழக மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட் டத் துணைச் செயலாளர் அ.உத் திராபதி, தஞ்சை மாநகர தலைவர் ப.நரேந்திரன், மாநகர செயலாளர் அ.டேவிட், ஆவடி மாவட்ட செய லாளர் இளவரசன், மனித நேயர் எஸ்.எஸ்.இராஜ்குமார் (தி.மு.க) பேராசிரியர் பாரி, விவசாய சங்கம் கண்ணன், சந்திரகுமார், சித்திரக் குடி மலையமான் உள்ளிட்ட ஏரா ளமான உறவினர்கள் நண்பர்கள் குடும்பத்தினர்கள் பெருந்திரளாக பங்கேற்று பழநிராசன் - பங்கயற் செல்வி இணையர்களுக்கு பய னாடை அணிவித்து சிறப்பு செய்த னர்,

நூல் வெளியீடு

பொறியாளர் சு.பழநிராசன் எழுதிய ஒரு சிற்றோடையின் கதை நூலினைஉலக தமிழர் பேரமைப் பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளி யிட திராவிடர் கழக பொதுச் செய லாளர் இரா.ஜெயக்குமார் பெற் றுக் கொண்டார் வந்திருந்த அனை வருக்கும் நூல் வழங்கப்பட்டது

பெரியார் உலகத்திற்கு ரூ10,000

திருமணப் பொன்விழா, பவள விழா மகிழ்வாக சித்திரக்குடி பொறியாளர் சு. பழநிராசன். பங் கயற்செல்வி வாழ்வினையர் சார் பாக திருச்சி சிறுகனூரில் அமைய வுள்ள பெரியார் உலகத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் ரூ.10,000 இரண் டாவது தவணையாக வழங்கி மகிழ்ந்தனர்.


No comments:

Post a Comment