தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் கார்மீது பா.ஜ.க.வைச் சேர்ந்த சிலர் செருப்புத் தூக்கி எறிந்தது கண்டனத்திற்குரியது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லட்சுமணன் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார் என்பது மிகவும் சோகமானதாகும்.
அவர் உடல் விமானம்மூலம் மதுரை வந்து சேர்ந்த நிலையில், தமிழ்நாடு நிதியமைச்சர் மாண்புமிகு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இறுதி மரியாதை செலுத்திவிட்டு, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது, பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்கள் நடந்துகொண்ட அநாகரிகமான முறை கண்டிக்கத்தக்கது.
அமைச்சரின் கார்மீது செருப்பு வீசப்பட்டுள்ளது.
பி.ஜே.பி. கூறும் தார்மீகப் பண்பு இதுதான் என்றால், இவர்களைத் தமிழ்நாட்டு மக்கள் அடையாளம் காணவேண்டும்! வன்முறையில் ஈடுபட்டவர்கள்மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அண்மைக்காலமாக பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸின் பேச்சு களும், நடப்புகளும் எல்லையை மீறிக் கொண்டுள்ளன. இதற்கொரு முடிவு காணப்படவேண்டும். இல்லை யெனில், வெளிமாநிலங்களில் அவர்கள் கையாளும் வன்முறைக் கலாச்சாரத்தின்மூலம் எதையும் சாதித்து விடலாம் என்ற தைரியம் வந்துவிடும், எச்சரிக்கை!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment