மின்சார சட்ட மசோதாவில் "இலவச மின்சாரத்தை நிறுத்த சொல்லவில்லை": ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பல்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 14, 2022

மின்சார சட்ட மசோதாவில் "இலவச மின்சாரத்தை நிறுத்த சொல்லவில்லை": ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பல்டி

தூத்துக்குடி, ஆக. 14- மின்சார சட்ட மசோதாவில் இல வச மின்சாரத்தை நிறுத் துங்கள் என இதுவரை சொல்லவில்லை” என்று ஒன்றிய அமைச்சர் எல்.முரு கன் கூறினார். 

ஒன்றிய தகவல் ஒலி பரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால் வளத்துறை இணை அமைச் சர் எல்.முருகன் 12.8.2022 அன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலை யத்துக்கு வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களி டம் கூறியதாவது:- பிரத மர் மோடி மூவர்ண தேசிய கொடியை 15-ஆம் தேதி வரை அனைத்து வீடுகளி லும் ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள் ளார். ஆகையால் அனை வரும் வீடுகளில் தேசிய கொடியேற்ற வேண்டும். மின்சார சட்டம் போதைப் பொருளை ஒழிப்பது என்பன மிகவும் முக்கிய மானவை. தமிழ்நாட்டில் அதிகளவில் போதைப் பொருள் புழக்கத்தில் இருப்பது கவலை கொள் ளும் விதமாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு முக்கிய மான, தீவிரமான நடவ டிக்கைகளை எடுக்க வேண்டும். மின்சார சீர் திருத்த சட்டம் எந்தவித இலவச மின்சாரத்தையும் நிறுத்துங்கள் என்று இது வரை சொல்லவில்லை. முழு சட்டம் வந்த பின்பு தான் தெரியும். 

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment